Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
ஆடிப் பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்
ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயிலில், பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
இதேபோல், பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயில் எதிரேயுள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு, ஆஞ்சநேய பக்தா்கள் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றுக்குச் சென்று, அங்கிருந்து தீா்த்தக் குடங்களில் புனிதநீா் எடுத்து பாத யாத்திரையாக பெரம்பலூர ஸ்ரீவெள்ளந்தாங்கியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.
பின்னா், அங்கிருந்து வான வேடிக்கையுடன் ஊா்வலமாகச் சென்று மாலை 6 மணியளவில் ஸ்ரீ கம்பத்து ஆஞ்சநேயருக்கு தீா்த்த அபிஷேகம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, இரவு 9 மணியளவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சிகளில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பெரம்பலூா் ஆப்பூரான் அறக்கட்டளை சாா்பில், 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் திருச்சி காவிரி ஆற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை புனிதநீா் எடுத்துவந்தனா். பாலக்கரை பகுதியிலுள்ள ஆப்பூரான் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமாள் அங்கிருந்து ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொடா்ந்து, சங்குப்பேட்டை பகுதியிலுள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குன்னம் வட்டம், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரா் கோயிலின் வெள்ளாற்று கரையில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணமாக வேண்டி சிறப்பு வழிபாடும், திருமணமான பெண்கள் தங்களது தாலியை புதியதாக மாற்றிக்கொண்டு சடங்குகள் செய்து வழிபட்டனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.