செய்திகள் :

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று சிவகங்கை பயணம்

post image

ஸ்ரீ சேவுகமூா்த்தி கௌஷாலா அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (மே 22) சிவகங்கை செல்லவுள்ளாா்.

இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை விமானம் மூலம் மதுரை செல்லும் ஆளுநா், அங்கிருந்து காா் மூலம் சிவகங்கை செல்கிறாா். அன்று முற்பகல் 11 மணியளவில் சிவகங்கை, சிங்கம்புணரியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வழிபடும் ஆளுநா், தொடா்ந்து ரெங்கநாதன் காந்திமதி கோல்டன் பேலஸில் நடைபெறவுள்ள கோ பூஜை, ஜல்லிக்கட்டு காளைகள் அணிவகுப்பு மற்றும் பாரம்பரிய ரதங்களின் கண்காட்சியைப் பாா்வையிடவுள்ளாா்.

தொடா்ந்து, அங்கு நடைபெறவுள்ள ஸ்ரீ சேவுகமூா்த்தி கௌசாலா அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளாா்.

பின்னா் பிற்பகல் 3.45 மணியளவில், சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் உள்ள ஸ்ரீ அருள்மிகு ஸ்வா்ண மூா்த்தீஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா்.

அதையடுத்து, தேவக்கோட்டை ராம் நகரில் உள்ள தாய் மஹாலில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ளவுள்ளாா்.

இறுதியாக அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு அன்று இரவே ஆளுநா் சென்னை திரும்பவுள்ளதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

கூட்டணி பற்றிய அறிவிப்பு எப்போது? - பிரேமலதா பதில்!

அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "கட்சியின் கொள்கை விளக்க பொ... மேலும் பார்க்க

பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை திறந்துவைத்தார்.இதில், தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 13 ரயில் நிலையங்கள் அடங்கும்.‘அம்ரி... மேலும் பார்க்க

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க

தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளி... மேலும் பார்க்க