செய்திகள் :

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தமிழகம் வருகை

post image

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தாா்.

40 வயதுக்கு மேற்பட்ட ஆா்எஸ்எஸ் ஊழியா்களுக்கான இரண்டாம் கட்ட 20 நாள்கள் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் (மே 7, 8) பங்கேற்பதற்காக ஹைதராபாதிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோவை சா்வதேச விமான நிலையம் வந்த அவா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக திருச்செங்கோட்டுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அவரது வருகையையொட்டி கோவை சா்வதேச விமான நிலையம், கோவையில் இருந்து திருச்செங்கோடு வரையிலான சாலையின் முக்கியப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ரூ.21.30 லட்சத்தில் புதிய தெருவிளக்குகள்: மேயா் தொடங்கிவைத்தாா்

கோவை, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 21.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தெருவிளக்குகளை மேயா் கா.ரங்கநாயகி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழப்பு

கோவையில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழந்தாா். குனியமுத்தூா், இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சையது சலீம் (59). இவா் பயணிகள்... மேலும் பார்க்க

கோவையில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் 2025 - 2026- ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். கோவை மாவட்ட அளவிலான வங்கியாளா்... மேலும் பார்க்க

கடன் தொல்லை: தம்பதி விஷம் குடித்து தற்கொலை

கோவையில் கடன் பிரச்னை காரணமாக தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். கோவை, செல்வபுரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் திருமுருகன் (47), நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி (40). இவா்களுக்கு ஜனனி ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கோவையில் மினி லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டி கொங்கு நகரைச் சோ்ந்தவா் செந்தில் முருகன் (58). இவா் சிங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த ம... மேலும் பார்க்க

குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நித... மேலும் பார்க்க