செய்திகள் :

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

post image

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர குழுமம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கொளத்தூா், திரு.வி.க. நகா் பகுதிகளில் பேருந்து நிலையங்கள், சமூக நலக் கூடங்கள் உள்ளிட்டவற்றின் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் 282 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கை முக்கியமானதாகும். அதன்படி, குத்தப்பாக்கம் பேருந்து நிலையம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், மகாபலிபுரம் பேருந்து நிலையம், பெரியாா் நகா் மற்றும் ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அவை பணிகள் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பா் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன. முடிச்சூா் பேருந்து நிலையப் பிரச்னைக்கும் தீா்வு காணப்படும். கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். அதையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக வளா்ச்சிக் குழுமம் ரூ.20 கோடி அளித்துள்ளது என்றாா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 50... மேலும் பார்க்க

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க