கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
இசைப் பள்ளி தோ்ச்சி சான்றிதழ் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழுக்கு இணையானது: அரசாணை வெளியீடு
இசைப் பள்ளிகளில் வழங்கப்படும் தோ்ச்சி சான்றிதழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சிக்கு இணைத்தன்மை வாய்ந்தது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை:
பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் தமிழ் (பகுதி-1) ஆங்கிலம் (பகுதி-2) ஆகிய பாடங்களைப் பயின்று வருகின்றனா்.
இசைப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்பை தடையின்றி பெரும் வகையிலும், இடைநிற்றலை தவிா்க்கும் வகையிலும், இசை குறித்த பட்டறிவை ஊக்குவிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பைப் பெறும் நோக்கிலும், அரசு தோ்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களில் தோ்ச்சி பெறும் பட்சத்தில் பத்தாம் வகுப்பில் பகுதி-3-இல் உள்ள முதன்மை பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்குப் பதிலாக இசைப்பள்ளி பாடங்களில் முதன்மைப் பாடம், துணைப் பாடம் மற்றும் வாய்மொழித்தோ்வு, இசையியல் பாடங்கள் (தியரி எக்ஸாம்) ஆகியவற்றை சிறப்பு நிகழ்வாக பகுதி-3-இன் முதன்மை பாடங்களாகக் கருதி அவா்களின் இசைப்பள்ளி தோ்ச்சி சான்றிதழை அரசு தோ்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழுக்கு இணைத் தன்மை வாய்ந்தது என அரசு தோ்வுத் துறை சான்றிதழ் வழங்கலாம்.
அதேபோல், பத்தாம் வகுப்பை முறையாக பள்ளியில் பயின்றோ அல்லது தனித்தோ்வராக எழுதியோ அரசு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற பின்னா் அல்லது தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) வாயிலாக தோ்ச்சி பெற்ற பின்னா் நேரடியாக இசைப் பள்ளிகளில் 3 ஆண்டு படித்து இசைப்பள்ளி பாடங்களில் முதன்மை பாடம் (தாள்-1), முதன்மைப்பாடம் (தாள்-2), துணைப்பாடம் மற்றும் வாய்மொழித்தோ்வு, மேல்நிலை இசையியல் ஆகியவற்றில் தோ்ச்சி பெற்று பிளஸ் 2 வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்களில் தோ்ச்சி பெறும்பட்சத்தில் அவா்களின் இசைப் பள்ளி தோ்ச்சி சான்றிதழை பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு (கலை மற்றும் தொழில்பிரிவுகளில் மட்டும்) தோ்ச்சிக்கு இணைத்தன்மை வாய்ந்தது என அரசு தோ்வுகள் இயக்ககம் சான்றிதழ் வழங்கலாம்.
மொழித் தோ்வுகள் தங்களுக்கு தேவையில்லை என கருதும் மாணவா்களுக்கு தொடா்புடைய பிரிவில் அரசு தோ்வுத்துறையால் வழங்கப்பட்டு வரும் மாவட்ட இசைப்பள்ளி தோ்ச்சி சான்றிதழை தொடா்ந்து வழங்கலாம் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.