செய்திகள் :

இசை கேட்டு வளர்ந்த கோழிக்கறி உணவு! விலை ரூ. 5,500

post image

சமைத்த கோழிக்கறி உணவுக்கு தொழிலதிபர் ஒருவர் ரூ. 5500 பணம் செலுத்தியுள்ளார். இது குறித்து அந்த உணவகத்திடம் கேட்டபோது அவர்கள் அளித்த பதில், பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, அந்தக் கோழிக்கு நீருக்கு பதில் பால் கொடுத்துவந்ததாகவும், இசைக் கேட்டு வளர்க்கப்பட்டதாகவும் உணவகம் பதில் அளித்துள்ளது. உணவகத்தின் இந்த பதிலை அந்தத் தொழிலதிபர் சமூக வலைதளத்தில் கேலியாகப் பகிர்ந்துள்ளார்.

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள உணவகத்தில் தொழிலதிபர் ஒருவர் அரை கோழிக் கறியை உணவாக வாங்கி உண்டுள்ளார். அதற்குரிய தொகையாக 480 யுவான் ( இந்திய ரூபாய் மதிப்பில் 5,500) என ரசீதில் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ந்துபோன அத்தொழிலதிபர் இது குறித்து உணவக ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அந்தக் கோழி இசை கேட்டு வளர்ந்ததா? தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்து வளர்த்தீர்களா? என கோழியின் பின்புலம் குறித்தும் கேலியாகக் கேட்டுள்ளார்.

இதற்கு உணவக ஊழியர், இதற்கு ’ஆமாம்’ என பதிலளித்து, இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்ததாகக் கூறியுள்ளார். நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மார்ச் 14ஆம் தேதி சமூக வலைதளத்தில் தொழிபதிபர் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டதால், இது குறித்து பல்வேரு விதமான கருத்துகள் எழுந்துள்ளன.

உண்மை என்ன?

சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்த கோழி என்பது, அரிசி போன்ற தானியங்களுக்கு பதிலாக சூரியகாந்தி தண்டின் சாறு மற்றும் அம்மலரின் இதழ்களை உணவாகக் கொடுத்து வளர்க்கப்படுகிறது. இதனை சீன செய்தி நிறுவனமான செளத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மேலும், இது எம்பரர் சிக்கன் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் சுவை மற்றும் நிறத்துக்காக சீன உணவகங்கள் பலவும் இந்த வகைக் கோழிக்கறியை உணவகத்தில் பயன்படுத்துகின்றன.

உணவகங்களில் இந்த வகைக் கோழிக்கறிக்கு ஒரு கிலோ 200 யுவான் (ரூ. 2,300) முழு கோழி 1000 யுவான் (ரூ. 11,500) வசூலிக்கப்படுகிறது.

இந்த வகைக் கோழிகள் உண்மையில் பாரம்பரிய இசை ஒலிகளுக்கு மத்தியில் வளர்க்கப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பால் கொடுப்பதில்லை.

இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கோழிக் கறியை அதன் சுவையை விட, அதற்காகச் சொல்லப்படும் கதைகளின் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது என்றும்,

சீனாவில் பல்வேறு பகுதிகளில் வளரும் கோழிகள், ஷாங்காய்யில் மட்டும் தனித்தனி விநோத கதைகளுடன் அதிக விலைக்கு விற்பனையாவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் ம... மேலும் பார்க்க

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க