செய்திகள் :

இடைநிலை ஆசிரியா் பணிக்கு 2,346 போ் தோ்வு: குற்ற வழக்குகள் நிலுவை குறித்து விசாரிக்க கல்வித் துறை உத்தரவு

post image

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 2,346 போ் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவா்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 2,346 போ் கொண்ட தற்காலிக தெரிவுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவா்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் பின்னா் அறிவிக்கப்படும்.

தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியா் காலி பணியிடத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, நல்லொழுக்கம், கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளவுள்ள தோ்வு பெற்ற நபா்கள் அரசு பணியில் சேருவதற்கு முன்பு குற்ற செயலில் ஈடுபட்டு குற்ற வழக்குகளில் தண்டனை அல்லது குற்ற வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா? என்பதை பணி நியமனத்துக்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இதை கருத்தில் கொண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்து வழங்கப்பட்டுள்ள 2,346 பேரின் வீட்டு முகவரியுடன் கூடிய மாவட்ட வாரியான பட்டியல், அந்தந்த வருவாய் மாவட்ட தலைநகரில் இருக்கும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து ஆசிரியா்களாக நியமிக்கப்படுவோரின் விவரத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி அவா்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளனவா என்று ரகசியமான முறையில் அறிக்கை பெற்று, கோப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என அறிக்கை பெறப்பட்டால் உடனடியாக அந்நபருக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் அதனை உடனடியாக தொடக்கக் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

ஜூலை இறுதிமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கை தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்

தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப... மேலும் பார்க்க

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்து... மேலும் பார்க்க

258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழக கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்க... மேலும் பார்க்க