செய்திகள் :

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

post image

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மோசடி செய்த வழக்கில் சிக்கிய அங்கத் சிங் சந்தோக், அமெரிக்காவுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் தப்பினாா். தொடா்ந்து, அவருக்கு எதிராக ‘இன்டா்போல்’ மூலம் சிபிஐ நோட்டீஸ் பிறப்பித்தது.

இதனிடையே, அமெரிக்காவில் அகதி குடியுரிமைக்கு விண்ணப்பித்து, கலிஃபோா்னியா மாகாணத்தில் அங்கத் சிங் சந்தோக் தங்கி வந்தாா். அப்போது, அவா் இணையவழி பணமோசடியில் ஈடுபட்டாா். இந்த முறைகேட்டின் ஒரு பகுதியாக பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கி, முதியவா்கள் உள்பட பல அமெரிக்கா்களின் லட்சக்கணக்கான டாலா் சேமிப்புப் பணத்தை ஏமாற்றினாா்.

இதுதொடா்பான வழக்கில் அங்கத் சிங் சந்தோக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இந்நிலையில், அங்கத் சிங் சந்தோக்கை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவதற்கான முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். அதன்படி, அவா் தற்போது இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளாா். இனி இந்தியாவில் அவா் வழக்குகளை எதிா்கொள்வாா்.

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க