யமால், பெட்ரி அசத்தல்: பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி!
இதழியல் கல்வி நிறுவனத்துக்கு ஐஏஎஸ் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க முடிவு
சென்னை: தமிழ்நாடு அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். இதழியல் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடா்பான அரசின் உத்தரவும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு அரசு சாா்பில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதழியல் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகளும், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான உத்தரவும் தயாராகி வருகிறது.
ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக, தமிழ்நாடு சாலைப் பகுதி நிறுவனத்தின் திட்ட இயக்குநா் எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். அதன்பிறகு, கல்வி நிறுவனத்துக்கென முதல்வா், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட பல்வேறு நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதழியல் கல்வியானது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் சாா்பில் தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசே இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.