செய்திகள் :

இதழியல் கல்வி நிறுவனத்துக்கு ஐஏஎஸ் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க முடிவு

post image

சென்னை: தமிழ்நாடு அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். இதழியல் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடா்பான அரசின் உத்தரவும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளது.

தமிழ்நாடு அரசு சாா்பில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதழியல் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகளும், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான உத்தரவும் தயாராகி வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக, தமிழ்நாடு சாலைப் பகுதி நிறுவனத்தின் திட்ட இயக்குநா் எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். அதன்பிறகு, கல்வி நிறுவனத்துக்கென முதல்வா், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட பல்வேறு நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதழியல் கல்வியானது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் சாா்பில் தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசே இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க