செய்திகள் :

'இது எவ்வளவு பெரிய அவமானம்' - பெண் ஏடிஜிபி விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி

post image

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. திமுக சிறுபான்மை மக்களை தாஜா செய்கிற வகையில் அங்கு மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானதி சீனிவாசன்

இந்து முன்னணியின் போராட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயல். அங்கு அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர் குகைகளில் பச்சை நிற பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக திமுக இந்து மத உணர்வுகளை தொடர்ந்து அவமதிக்கிறது. இந்து மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதற்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காவல்துறை பெண் ஏடிஜிபி, தன்னுடைய உயிருக்கே ஆபத்துள்ளது என்று கூறியுள்ளார். அந்த பெண் அதிகாரி துயரத்தை தாங்க முடியாமல், காவல்துறை உயர் அதிகாரியிடம் புகாரளித்து ஆறு மாதங்களாக விசாரிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

தமிழக காவல்துறை

இது எவ்வளவு பெரிய அவமானம். காவல்துறை முழுவதுமாக சீர்குலைந்து போயிருக்கிறது. காவல்துறையை கையில் வைத்துள்ள மாநிலத்தின் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை யாராலும் குறை சொல்ல முடியாத ஒரு பட்ஜெட்டாக உள்ளது. எதிர்க்கட்சிகள் குறை சொல்வதற்கு ஒரு பாயிண்ட் கூட கிடைக்கவில்லை. டெல்லி தேர்தல் களம் பாஜக-வுக்கு பிரகாசமாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மீது சாதாரண மக்களின் அதிருப்தி பல மடங்கு அதிகரித்துள்ளது.

Union budget 2024-25 | மத்திய பட்ஜெட்

அந்த மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசின் பலனை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக பாஜக-வில் மொத்தமுள்ள 67 மாவட்டங்களில், 66 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைவர் நியமனத்தை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்.” என்றார்.

புதுச்சேரி: `இறுதி ஊர்வலத்தில் மாலைகளை சாலையில் வீசினால் அபராதம்!’ – எச்சரிக்கும் நகராட்சி

புதுச்சேரியில் நடைபெறும் இறுதி ஊர்வலங்களின்போது சாலைகளில் மலர் மாலைகளை வீசுவதும், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் பல நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள்... மேலும் பார்க்க

'எம்.ஜி.ஆருக்கும், விஜய்க்கும் ஏணி வைத்தாலும் எட்டாது..!' - தமிழிசை காட்டம்

" 'பா.ஜ.க ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் தமிழகத்தில் இனி ஆட்சி அமைக்க முடியாது' என்கிறீர்கள். ஆனால், 'தோல்வி பயத்தில் இடைத்தேர்தலைப் புறக்கணித்தவர்களின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை'... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``சகோதரத்துவ தமிழக மக்களை சீண்டும் தேவையற்ற நடவடிக்கை" - திமுக-வை சாடும் அண்ணாமலை

திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பாக பிப்ரவரி 4-ல் (இன்று) போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அறிவித்ததைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்... மேலும் பார்க்க

TVK : `தீவிர ரசிகர்; ஆக்டிவ் நிர்வாகி’ - தவெக கோவை மாவட்ட செயலாளராக ஆட்டோ ஓட்டுநரை நியமித்த விஜய்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஓராண்டை கடந்துவிட்டது. தற்போது வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவி... மேலும் பார்க்க

`இந்தியா சரியான முடிவெடுக்கும்...' - சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தன் நாட்டிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குவாத்தமாலா, பெரு, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்... மேலும் பார்க்க

`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது, ``மத்திய பட்ஜெட் நாளில் நிதியமைச்சருக்கு, கு... மேலும் பார்க்க