செய்திகள் :

இது 96 காதல் அல்ல, 93 காதல்! முதியவரின் காதலும் நகைக் கடைக்காரரின் மனிதாபிமானமும்!

post image

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள நகைக்கடை ஒன்றில், 93 வயது முதியவர் தனது மனைவிக்கு மாங்கல்யம் வாங்க வந்த போது, நெகிழ்ந்துபோன நகைக்கடைக்காரர் ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாங்கல்யம் வழங்கிய விடியோ வைரலாகியிருக்கிறது.

வயதான முதிய தம்பதியான நிவ்ருத்தி ஷிண்டே - சாந்தாபாய், இரண்டு நாள்களுக்கு முன்பு, ஒரு நகைக்கடைக்குள் சென்றுள்ளனர். முதலில் இவரும் ஏதே உதவி கேட்கத்தான் வந்திருப்பார்கள் என்று நனைக்கடை ஊழியர்கள் கருதினார்கள்.

ஆனால், நிவ்ருத்தியோ, தனது மனைவிக்கு மாங்கல்யம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தை நகைக்கடைக்காரர்களிடம் கூறியிருக்கிறார். இந்த தள்ளாத வயதில், தனது மனைவிக்கு தங்க மாங்கல்யம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசையோடு வந்த முதியவரின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட நகைக்கடை உரிமையாளரும், அவர்கள் தேர்வு செய்த மாங்கல்யத்துக்கு வெறும் ரூ.20 மட்டும் ஒரு சம்பிரதாயத்துக்காகப் பெற்றுக்கொண்டு நகையைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து நகைக்கடைக்காரர் கூறுகையில், வயதான தம்பதி நகைக்கடைக்குள் வந்தனர். 93 வயது நிவ்ருத்தி தன் கையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த ரூ.1,120 மட்டும் இருந்தது. இவர்களது ஒற்றுமையும் காதலும் எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தேர்வு செய்த மாங்கல்யத்தை வெறும் 20 ரூபாய் பெற்றுக்கொண்ட கொடுத்தோம். அனைவரும் அவர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக எனது மனைவியிடம் கண்டிப்பாக ஒரு தங்க நகையாவது வாங்கித் தருவேன் என்று கூறிவந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இறுதியாக ஆயிரம் ரூபாய் சேர்த்துக்கொண்டு நகைக்கடைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவர்கள் எங்களுக்கு பணமே பெற்றுக்கொள்ளாமல் மாங்கல்யத்தைக் கொடுத்துவிட்டனர். இறுதியாக நான் சொன்னபடி என் மனைவி கழுத்தில் தங்க மாங்கல்யம் அணிந்துகொண்டதைப் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

அவர்களது மகிழ்ச்சியும், தள்ளாத வயதில் இருவருக்கும் இடையிலான அன்பும் மிக அழகாக விடியோவில் பதிவாக, அது சமூக வலைத்தளத்திலும் வைரலாகிவிட்டது.

தேனிலவு கொலை: மனைவி உள்பட 2 பேருக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து!

திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை ப... மேலும் பார்க்க

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்த... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க