செய்திகள் :

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

post image

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார். சீன-இந்திய உறவுகள் தொடர்பாக இருதரப்பும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டன.

இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கான உடன்பாடு கண்டுள்ளதைக் காணவே சர்வதேச சமூகம் விரும்பியது. இந்த நடவடிக்கையை சீனா ஆதரிக்கவும் வரவேற்கவும் செய்கிறது.

சண்டை நிறுத்தத்துக்கான சூழலை வலுப்படுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் பாடுபடும் என்றும் மேலும் பூசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் என்றும் சீனா நம்புகிறது.

இரு நாடுகளும் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் கையாளும் என்றும் அரசியல் தீர்வுக்கான பாதையில் இரு நாடுகளும் பயணிக்கும் என்றும் நம்புகிறோம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தகவல் தொடர்பைக் கொண்டிருக்கவும் இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தவும் முக்கியப் பங்காற்ற சீனா தயாராக உள்ளது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜம்மு}காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் மே 7-ஆம் தேதி நடத்திய "ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், சண்டை நிறுத்தத்தை அமலுக்கு கொண்டுவர இந்தியாவும் பாகிஸ்தானும் சனிக்கிழமை உடன்பாடு கண்டன. இரு தரப்புக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டதை சீனா திங்கள்கிழமை வரவேற்றது.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு

அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, செய்தி ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா். பஹல்காமில் நடந்த படுகொலை வெறும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல - அது இந்தியாவின் மனசாட்சியின் ம... மேலும் பார்க்க