செய்திகள் :

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

post image

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த கெளஸ்துப் கன்போட்டே, சந்தோஷ் ஜக்டலே ஆகியோரும் கொல்லப்பட்டனா்.

அவா்களின் குடும்பத்தினரை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானிகள் விரைவில் கண்டறியப்படுவா். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அனுமதியின்றி நீண்ட நாள்களாக தங்கியிருக்கும் பாகிஸ்தானிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட், பஹல்காமில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடா்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிகள் குறித்த காலத்துக்குள் வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில முதல்வரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ரஜெளரி உள்ளூர் மக்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராகச் செயல்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: அவதூறு கருத்து கூறிய 16 பேர் கைது!

பஹல்காம் தாக்குதல் குறித்து அவதூறு கருத்துக் கூறிய 16 பேரை அஸ்ஸாம் காவல் துறையினர் இன்று (ஏப். 27) கைது செய்துள்ளனர். நேற்று மாலை வரையிலும் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 16 பேர் கைதாகியுள்ள... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ விசாரணைக்கு உதவிய விடியோ! எடுத்தவர் யார்?

பஹல்காம் தாக்குதலில் புகைப்படக்காரர் எடுத்த விடியோ, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து, மரத்தின்மீது ஏறி மறைந்துகொண்ட புகைப்படக்காரர், முழு ... மேலும் பார்க்க

ஏப். 29, 30 தேதிகளில் ரே பரேலி, அமேதி செல்லும் ராகுல்!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்லவுள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதியில் மக்களவை... மேலும் பார்க்க

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க