செய்திகள் :

இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

post image

‘இந்தியா விதிக்கும் அதிக வரிகளைத் தவிா்க்க, அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

கடந்த 13-ஆம் தேதி, அமெரிக்க அதிபா் மாளிகையில் பிரதமா் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பரஸ்பர வரிக் கொள்கையை டிரம்ப் அறிவித்தாா். அண்மையில், அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்குடன் இணைந்து ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலும் டிரம்ப் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பில், உலகிலேயே இந்தியாதான் அதிக வரிகளை வசூலிக்கிறது என்று அவரிடம் கூறினேன். இதனால்தான் இந்தியாவில் எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் காரை விற்பது சாத்தியமற்ாக உள்ளது. இந்தியா விதிக்கும் அதிக வரிகளுக்கு, அதே விகிதத்தில் பரஸ்பர வரியை விதிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இதே காரணங்களுக்காக இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை எலான் மஸ்க் அமைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், அது அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்றாா்.

அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, இந்திய சந்தையில் நுழையும் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு பிரிவு பணிகளுக்கான ஆள்சோ்ப்பு நடவடிக்கையை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆட்சியை மாற்ற நிதி?:

தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ), இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட அமெரிக்க அரசின் நிதியுதவியை ரத்து செய்தது. இதுதொடா்பான நிா்வாக உத்தரவில் அதிபா் டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டாா்.

இந்நிலையில், அமெரிக்காவின் மியாமி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அதிபா் டிரம்ப், ‘இந்தியாவில் வாக்குப் பதிவு விகிதத்தை உயா்த்த அமெரிக்கா ஏன் 2.1 கோடி டாலரை செலவிட வேண்டும்?. அந்நாட்டில் வேறு யாரையோ ஆட்சியில் அமா்த்த முந்தைய பைடன் நிா்வாகம் விரும்பியதாகக் கருதுகிறேன். இதுகுறித்து இந்திய அரசுக்கு நாம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆசிய கண்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்நாடுகளுக்கு அமெரிக்க நிதியளிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.

எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் 145 ஆண்டுகள் பழைமையான மேசையை மாற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்துக்கு அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ... மேலும் பார்க்க

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!

இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருத... மேலும் பார்க்க

எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த... மேலும் பார்க்க

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நி... மேலும் பார்க்க

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க