செய்திகள் :

இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை! 12 ஆண்டுகளுக்குப் பின்..!

post image

மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளதை ஐசிசி அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

இந்தத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெங்களூரு, குவாஹாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கை தலைநகரான கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபியின் போது ஏற்பட்ட பிரச்சினை மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் பொதுவான மைதானமாக கொழும்பு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெறுகிறது. பெங்களூருவில் கோலாகலமாகத் தொடங்கும் தொடருக்கான முதல் போட்டியில் இந்திய மகளிரணி விளையாடுகிறது.

அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டி குவாஹாத்தி அல்லது கொழும்புவில் நடைபெறுகிறது. அதேபோன்று, நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானம் அல்லது கொழும்புவில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி முதல் கோப்பைக்கான தேடலில் களமிறங்கியுள்ளது. அதேவேளையில், ஆஸ்திரேலிய இதுவரை 7 கோப்பைகளை வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

வெற்றிக்காகப் பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை! - கம்பீர்

வெற்றிக்காகப் பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி 5 போட்டிக... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டி20 தொடர்: மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸி. அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியின் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரை மையமாக வைத்து மேற்கிந்திய தீவுகளுக்கு ஜூலை ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் வரும் ஜூன்.20ஆம் தேதி முத... மேலும் பார்க்க

சூதாட்ட புகாரில் கைதான முன்னாள் இலங்கை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ரா சேனநாயக் மீது சூதாட்டத்திற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை அணிக்காக 1 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். ப... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஆஸி. வீரர்கள்!

ஆஸ்திரேலிய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். டபிள்யூடிசி இறுதிப் போட்டி ஜூன். 11-15ஆம் தேதிகளில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் திடலில் நடை... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎல் தொடா் கோவையில் தொடக்கம்: கோவை-திண்டுக்கல் மோதல்

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு ப்ரீமியா் லீக் 2025 கோவையில் வியாழக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை ... மேலும் பார்க்க