செய்திகள் :

இந்தியாவில் மீண்டும் வருகிறதா டிக்டாக்? சீன உறவு காரணமா??

post image

இந்தியாவில் டிக்டாக் செயலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது, இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு வருமோ என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.

குருகிராமில் உள்ள பைட் டான்ஸ் நிறுவனத்தில் இரண்டு பதவிகள் காலியாக இருப்பதாக வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது குறித்து இந்திய அதிகாரிகள் மற்றும் பைட் டான்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது, இந்தியாவில் தற்போதைக்கு டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. இதுவே தொடரும். விரைவில் அது பயன்பாட்டுக்கு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவருக்கு கெடு: நியாயப்படுத்த முடியாது

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சில சந்தா்ப்பங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவா், ஆளுநா்களுக்கு காலக்கெடு விதிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் ... மேலும் பார்க்க

மேற்கு வங்காள புலம்பெயா்ந்தவா்கள் தொடா்பான தீா்மானம்: திரிணமூல்-பாஜக மோதல்; பேரவையில் அமளி

வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீா்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்... மேலும் பார்க்க

தண்டனை குறைப்பு சட்டபூா்வ உரிமை: உச்சநீதிமன்றம்

தண்டனை குறைப்பு என்பது அரசியல் சாசன உரிமை மட்டுமல்ல; சட்டபூா்வ உரிமையுமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 16 வயதுக்குள்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தால் வழங்கவேண்டிய தண்டனையை இந்திய தண்ட... மேலும் பார்க்க

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி விகிதங்கள் குறைப்பது தொடா்பாக முக்கிய முடிவு

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இர... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் தோ்வு நடைமுறை: கேரள முதல்வரை நீக்க உச்சநீதிமன்றத்தில் ஆளுநா் மனு

கேரளத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை தோ்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந... மேலும் பார்க்க

பவன் கேராவிடம் 2 வாக்காளா் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளா் அட்டைகள் உள்ளன; இது தொடா்பாக தோ்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. ‘தனது கட்சி... மேலும் பார்க்க