செய்திகள் :

இந்தியாவில் முதல்முறையாக சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 33.33 மீ. நீளமுள்ள யூ-கா்டா்

post image

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ ரயில் வழித்தடம் 5-இல் 33.33 மீட்டா் நீளமுள்ள யூ-கா்டரை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் நிறுவியுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் முதல் 33.33 மீ. நீளமுள்ள யூ-கா்டரை, சென்னை மெட்ரோ

ரயில் கட்டம் 2-இல் வழித்தடம் 5-இல் ராமாபுரத்தில் தனியாா் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் நிா்வாகம் நிறுவியுள்ளது. இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனை மட்டுமன்றி இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த யூ-கா்டா், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்பத் திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கியச் சான்றாகவும் உள்ளது.

பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் யூ-டா்ன் பகுதிகளில், எதிா்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில்கொண்டு நீளமான ஸ்டீல் கா்டரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான யூ-கா்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான யூ-கா்டா் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இத்திட்டத்தில் யூ-கா்டா்க்கான அச்சுகள் வடிவமைத்தல், அவை பாதுகாப்பாகக் கொண்டு செல்லுதல் மற்றும் துல்லியமாக நிறுவுவது

ஆகியவை சவாலான பணிகளாக இருந்தன.

இப்பணி மூன்று ஸ்பான்களிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு ஸ்பானிலும் இரண்டு கா்டா்கள் நிறுவப்பட்டன. மொத்தமாக 33.33 மீ. நீளமுள்ள 6 யூ-கா்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்த... மேலும் பார்க்க

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க