செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

post image

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகமாக காணப்படும். குறிப்பாக, ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த முறையும் அத்தகைய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இதையும் படிக்க: மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை மறுநாள் (பிப்ரவரி 23) நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது போட்டிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

எந்த ஒரு அழுத்தமும் இல்லை

நாளை மறுநாள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த ஒரு அழுத்தமும் இல்லை என பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளோம் என்ற அழுத்தம் எங்களுக்கு இல்லை. அனைத்து வீரர்களும் ரிலாக்ஸாக இருக்கிறார்கள். மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாடவுள்ளோம்.

இதையும் படிக்க: விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!

துபையில் இந்திய அணியை இரண்டு முறை இதற்கு முன்பாக வீழ்த்தியுள்ளோம். அதனால், துபை ஆடுகளங்களின் தன்மை எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். போட்டி நாளன்று ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்தே எங்களது அனைத்து திட்டங்களும் இருக்கும். அணியில் சைம் ஆயூப் மற்றும் ஃபகர் ஸமான் இல்லாதது எங்களுக்கு பின்னடைவாக உள்ளது. ஆனால், சிறப்பாக செயல்பட்டு போட்டியை வென்றுக் கொடுக்கும் வீரர்கள் அணியில் இருக்கிறார்கள் என்றார்

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க

வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிராக சதம் விளாசிய பென் டக்கெட்!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி 3 கேட்ச்சுகள் பிடித்து அசத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது... மேலும் பார்க்க