செய்திகள் :

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

post image

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா ஏற்கெனவே நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தாா்.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையிலான குழுவினருடன் இரு நாடுகளிடையே வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு தொடா்பாக ரஷிய துணைப் பிரதமா் மன்டுரோ தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டது.

இந்த கூட்டத்துக்கு முன்பாக மன்டுரோ அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், பிற எண்ணெய் பொருள்கள் மற்றும் நிலக்கரியை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி செய்வது குறித்தும் ரஷியா ஆலோசித்து வருகிறது.

கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலைய கட்டுமானத் திட்டத்தின் வெற்றிகரமான அனுபவத்தின் அடிப்படையில், அணுசக்தி துறையில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் ரஷியா ஆலோசித்து வருகிறது’ என்றாா்.

ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) இடையே விரைவில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை எதிா்கொள்வதற்கென சிறப்பு திட்டத்தை ரஷியா வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றால் அதை ரஷியாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யலாம். ரஷிய சந்தை இந்தியாவுக்காக எப்போதும் திறந்திருக்கும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க