செய்திகள் :

இந்தியாவுக்கு வரவேண்டாம்: கொலை மிரட்டல் குறித்து அதிர்ச்சியளித்த வருண் சக்கரவர்த்தி!

post image

2021 டி20 உலகக் கோப்பை தோல்வியால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை சமீபத்தில் வென்றது. அதில் தமிழக வீரர் வருண் சக்கரவத்தி சிறப்பாக பங்காற்றினார்.

3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் வருண் சக்கரவத்தி. அவரது சுழலால் பலரையும் திணறடித்தார். குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்.

டி20 உலகக் கோப்பை தோல்வி

2021 டி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி குரூப் ஸ்டேஜ் போட்டிகளோடு வெளியேறியது.

5 போட்டிகளில் 3இல் மட்டுமே வென்றது. அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

இந்தத் தொடரில் ஆஸி. அணி நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.

இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

கொலை மிரட்டல் குறித்து அதிர்ச்சியளித்த வருண் சக்கரவர்த்தி

2021 டி20 உலகக் கோப்பை எனக்கு மிகவும் கடுமையான நாள்கள். அப்போது கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டேன். மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் அணிக்கு வந்தேன். ஆனல, ஒரு விக்கெட் கூட எடுக்காததால் அடுத்த மூன்றாண்டுக்கு என்னை அணியில் எடுக்கக்கூட தயங்கினார்கள்.

உலகக் கோப்பை முடிந்ததும் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இந்தியா வந்தால் உயிருடன் இருக்க மாட்டாய் என மிரட்டல் விடுவித்தவர்கள் தெரிவித்தார்கள்.

என்னுடைய வீட்டையும் கண்டறிந்தார்கள். விமான நிலையத்திலிருந்து சிலர் என்னை பைக்கில் பின் தொடர்ந்தனர். ரசிகர்கள் உணர்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்று வரும் இறுத... மேலும் பார்க்க

நான் எதுவும் அறிவிக்கவில்லை; ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் நான் வெளியிடப்போவதில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல ஆண... மேலும் பார்க்க

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுக... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் எனக் கூறப்படுகிறது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளத... மேலும் பார்க்க

நடிகர் அஜித் வழியில் கோலி? கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன?

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன? என்ற சுவாரசிய தகவலைப் பகிர்ந்திருக்கிறார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்.சி.பி) அணிக்காக விளையாடுவதற்காக பெங்களூரு சென்... மேலும் பார்க்க

“பதற்றமாக இருந்தேன்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பதற்றமாக இருந்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பிய... மேலும் பார்க்க