செய்திகள் :

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

post image

காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடனான விரிவான பேச்சுவார்த்தைக்குத் தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது மற்றும் பயங்கரவாதம் ஆகிய விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் மட்டுமே பாகிஸ்தானுடன் நடத்தப்படும் என இந்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டின் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார், இந்தியாவுடன் நடுநிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“காஷ்மீர் மட்டுமில்லாமல் நிலுவையிலுள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். நடுநிலையான இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்த சொன்னார்கள். அப்படியானால், நாங்கள் அவர்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம்“ எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் ஒருசார்புடையாதாக மட்டுமே இருக்காது எனவும், இருநாடுகளுக்கு இடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகர்த்தது.

அதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரானது, மே 10 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதில், இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்நிறுத்தம் ஏற்பட தானே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

The Pakistani government has said it is ready for comprehensive talks with India on all issues, including Kashmir.

கொச்சி: பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அமித் ஷா

பஹல்காம் தாக்குதலில் பலியான என். ராமச்சந்திரனின் குடும்பத்தினரை கொச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார்.பாஜக வட்டாரத் தகவலின்படி, வெள்ளிக்கிழமை பாஜக மாநிலத் தலைமைக் கூட்டம் நடைபெற்ற ஹோ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 51 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை! முதல்வர் ஒப்புதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், சுமார் 51 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலைச் செய்யும் திட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இன்று ... மேலும் பார்க்க

பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே மீண்டும் விண்ணப்பிக்க உச்ச நீதிமனற்ம் அனுமதி வழங்கியு... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மிசோரமில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிசோரமின் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் ... மேலும் பார்க்க

திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

திரிபுராவில் உதய்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தனது இரண்டு பக்கத்து வீட்டுக்கா... மேலும் பார்க்க

வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு: வாரணாசியில் ஆசிரியர் கொலை

வாரணாசியில் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஆதர்ஷ் சிங்கிற்கும், பிரவீன் ஜாவிற்கும் இடையே வியாழக்... மேலும் பார்க்க