செய்திகள் :

பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே மீண்டும் விண்ணப்பிக்க உச்ச நீதிமனற்ம் அனுமதி வழங்கியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, மக்களுக்கு உதவுமாறு பதிவு செய்யப்பட்ட 12 பெரிய அரசியல் கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பிகாரில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறை மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த விசாரணையின்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், விடுபட்டதற்கான காரணம் உள்ளிட்டவற்றுடன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்ச -நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் எண்ணை வைத்து விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளனர். மேலும், இந்த நடைமுறையானது வாக்காளர்களுக்கு எளிமையாக இருக்கும்படி அமைத்துத் தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு உதவ முன் வராத அரசியல் கட்சிகளின் செயல், ஆச்சரியமளிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்திருக்கிறது.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விண்ணப்பக் கோரிக்கைகளை அளித்தது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த விசாரணையின்போது அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு, செப்டம்பர் 8ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் அளிக்கும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கான விண்ணப்பங்களுக்கு உரிய ரசீதுகளை வழங்கவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Supreme Court has also allowed voters who were removed or omitted from the draft voter list published in Bihar to re-apply online with their Aadhaar number.

இதையும் படிக்க... ஆப்பிள் ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலையில் ரூ.17,000 தள்ளுபடியா? அமேஸான் அறிவிப்பு

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடனான விரிவான பேச்சுவார்த்தைக்குத் தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது மற்றும் பய... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மிசோரமில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மிசோரமில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிசோரமின் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் ... மேலும் பார்க்க

திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

திரிபுராவில் உதய்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தனது இரண்டு பக்கத்து வீட்டுக்கா... மேலும் பார்க்க

வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு: வாரணாசியில் ஆசிரியர் கொலை

வாரணாசியில் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஆதர்ஷ் சிங்கிற்கும், பிரவீன் ஜாவிற்கும் இடையே வியாழக்... மேலும் பார்க்க

ஆக.25ல் ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

குஜராத்திற்கு ஆகஸ்ட் 25ல் வருகைதரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என குஜராத் முதல்வர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார். ஆக்ஸியம் மிஷன் - 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீர... மேலும் பார்க்க