செய்திகள் :

Whatsapp Call-ஐ பார்த்து வீட்டிலேயே பிரசவம்; வெளியில் காத்திருந்த மருத்துவர்கள்; என்ன நடந்தது?

post image

திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (32), நத்தம் கோபால்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஓசூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருவரும் திண்டுக்கல், கோபால்பட்டி எல்லாநகர்ப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பின்பு சத்யா (26) கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு மருத்துவமனையிலும் கர்ப்பம் தொடர்பான சிகிச்சை பெறாமல் கணவரும் மனைவியும் தங்களுக்குள்ளாகவே சொந்தமாகச் சிகிச்சை அளித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக நேரில் வந்து கணவன், மனைவி இருவரையும் சந்தித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினர்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்
வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்

ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து தாங்கள் வீட்டிலேயே சொந்தமாகப் பிரசவம் பார்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான சத்யாவிற்கு நேற்று பிரசவ வலி வந்ததாகவும் அவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதாக தகவல் பரவியது.

உடனே கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையில் நடமாடும் ஆம்புலன்ஸ்லில் மருத்துவக் குழுவினர், மற்றும் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் மற்றும் போலீசார், பொதுமக்கள் ஆகியோர் சத்யா வீட்டின் முன் குவிந்தனர்.

கஜேந்திரன்- சத்யா தம்பதியினரிடம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கணவர் கஜேந்திரன் மனைவி சத்யா ஆகிய இருவரும் வீட்டு அறையை மூடிக்கொண்டுள்ளனர். கஜேந்திரன் தனது செல்போனில் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக யாரிடமோ பேசி அவர்கள் கொடுக்கும் கட்டளைப்படி சொந்தமாகப் பிரசவம் பார்த்துள்ளார்.

வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்
வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்

இரவு 7 மணி அளவில் வீட்டின் கதவை கஜேந்திரன் திறந்ததுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 3 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருந்தாலும் இருவரின் பாதுகாப்பு கருதி சத்யாவின் வீட்டிற்கு வெளியே ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

வீட்டில் பிரசவம் பார்ப்பதற்குச் சில வாட்ஸப் குழுக்கள் ஊக்குவிப்பதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் மூன்று வாட்ஸ்அப் குரூப்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சேலம்: நாய் போல் செய்கை; தண்ணீர் குடிக்கச் சிரமம்; ரேபிஸ் நோய்க்குச் சிகிச்சை எடுக்காத தொழிலாளர் பலி

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்துள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (43) தறித் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வ... மேலும் பார்க்க

காவல்துறை பணியாளர்களுக்கு உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி வழங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை

மருத்துவ அவசரநிலைகளை திறம்பட எதிர்கொள்வதில் எப்போதும் தயாராக இருப்பதற்கான ஒரு முன்னோடித்துவ நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் மதுரை மாவட்ட காவல்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன... மேலும் பார்க்க

உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்கமும்..!

பொதுவாக நாம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் உப்பு, சோடியம் மற்றும் குளோரைடால் ஆனது. இது உடலில் சோடியத்தின் அளவை சரியாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தின் குளோரைடு அளவை பராமரிக்கவும் உணவில் சேர்க்கப்படுகி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 176 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 3,256 மாணவிகள் இணைந்து உலக சாதனை! | Photo Album

உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்பு... மேலும் பார்க்க

Presbyopia: வெள்ளெழுத்துப் பிரச்னைக்குத் தீர்வா? அமெரிக்க சொட்டு மருந்தின் பின்னணி என்ன?

மிடில் ஏஜ்ல இருக்கிற பலர், நியூஸ் பேப்பரையும் செல்போனையும் கண்ணுக்குப் பக்கத்துல, கொஞ்சம் தூரத்துல வெச்சு படிக்கிறதுக்குப் போராடிக்கிட்டு இருக்கிறதைப் பலரும் பார்த்திருப்போம். இதுவொரு நார்மலான பிரச்னை... மேலும் பார்க்க

Apollo children hospital: 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை!

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகளையும், குழந்தைகளுக்கான 10,000 துளையிடும் இதய சிகிச்சை நடைமுறைகளையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது!சென்னை, ஆகஸ்ட் 6, 2025: இ... மேலும் பார்க்க