செய்திகள் :

சேலம்: நாய் போல் செய்கை; தண்ணீர் குடிக்கச் சிரமம்; ரேபிஸ் நோய்க்குச் சிகிச்சை எடுக்காத தொழிலாளர் பலி

post image

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்துள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (43) தறித் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள பலரை அந்த நாய் கடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குப்புசாமியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி தன்னுடைய வளர்ப்பு நாயை அடிக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக குப்புசாமியின் காலில் நாய் கடித்துள்ளது. நாய்க் கடி பாதிப்பிற்கு மருத்துவச் சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடாமல் குப்புசாமி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்புசாமியின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குடிக்க முடியாமல், நாய் போலவே பல்வேறு செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

DOG
நாய்

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குப்புசாமியைப் பரிசோதனை செய்த போது ரேபிஸ் நோய்ப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்தனர்.

தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். தீவிர மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார்.

வளர்ப்பு நாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்காததால் தறித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

காவல்துறை பணியாளர்களுக்கு உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி வழங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை

மருத்துவ அவசரநிலைகளை திறம்பட எதிர்கொள்வதில் எப்போதும் தயாராக இருப்பதற்கான ஒரு முன்னோடித்துவ நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் மதுரை மாவட்ட காவல்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன... மேலும் பார்க்க

உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்கமும்..!

பொதுவாக நாம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் உப்பு, சோடியம் மற்றும் குளோரைடால் ஆனது. இது உடலில் சோடியத்தின் அளவை சரியாக வைத்துக் கொள்ளவும், ரத்தத்தின் குளோரைடு அளவை பராமரிக்கவும் உணவில் சேர்க்கப்படுகி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 176 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 3,256 மாணவிகள் இணைந்து உலக சாதனை! | Photo Album

உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை உலக சாதனை புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்பு... மேலும் பார்க்க

Presbyopia: வெள்ளெழுத்துப் பிரச்னைக்குத் தீர்வா? அமெரிக்க சொட்டு மருந்தின் பின்னணி என்ன?

மிடில் ஏஜ்ல இருக்கிற பலர், நியூஸ் பேப்பரையும் செல்போனையும் கண்ணுக்குப் பக்கத்துல, கொஞ்சம் தூரத்துல வெச்சு படிக்கிறதுக்குப் போராடிக்கிட்டு இருக்கிறதைப் பலரும் பார்த்திருப்போம். இதுவொரு நார்மலான பிரச்னை... மேலும் பார்க்க

Apollo children hospital: 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகள், 10,000 துளையிடும் இதய சிகிச்சை!

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகளையும், குழந்தைகளுக்கான 10,000 துளையிடும் இதய சிகிச்சை நடைமுறைகளையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது!சென்னை, ஆகஸ்ட் 6, 2025: இ... மேலும் பார்க்க

World Breast Feeding Week: சீம்பால் முதல் தாய்ப்பால் அருந்துகையில் குழந்தையின் மூக்கு பொசிஷன் வரை!

தாய்மை அடைந்திருக்கும் அம்மாக்களுக்கும், தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களுக்கும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மீனா பிரகாஷ், குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு மற்றும் பிரசவகால, தாய்ப்பால் அற... மேலும் பார்க்க