செய்திகள் :

கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!

post image

Redmi Note 15 Pro+ Display, Battery Specifications Confirmed Days Ahead of Launch in Chinaரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் இந்த வாரம் அறிமுகமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் வெளியாவதையொட்டி, அதன் சிறப்புகள் குறித்து ரெட்மி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 7,000mAh பேட்டரி திறன் மற்றும் 2 மீட்டர் உயரத்திலிருந்து தவறினாலும் சேதமாகாத வகையில் உரையிடப்பட்டுள்ளதகவும் ரெட்மி நிறுவனம் கூறுகிறது.

இதோடுமட்டுமின்றி, நீர்ப்புகாதன்மை தரச் சான்றிதழுக்கான ஐந்து நட்சத்திர அங்கீகாரத்தைப் பெற்ற முதல் ஸ்மார்ட்போனாகவும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் உள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன், 6.83 அங்குல திரை கொண்டது.

  • திரை பிரகாசத்திற்காக குறைந்தபட்சமாக் 1,800 nits திறனும் அதிகபட்சமாக 3,200 nits திறனும் கொண்டுள்ளது.

  • திரைக்கு டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புற அமைப்பு ஃபைபர்கிளாஸ் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 7,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. வயர் இல்லாமல் 90W சார்ஜ் ஆகும் திறனும், 22.5W ரிவர்ஸ் சார்ஜ் திறனும் உடையது.

  • ஸ்மார்ட்போனின் உறுதித்தன்மைக்காக, 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாததை உறுதிப்படுத்தும் வகையில், 50 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

  • அதிக வெப்பத்தை தாங்குவதற்காக IP66, தூசி படியாமல் இருக்க IP68, நீர்ப்புகாத்தன்மைக்காக IP69 திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஸ்நாப்டிராகன் 7எஸ் மூன்றாம் தலைமுறை புராசஸர் கொண்டது. ஆன்ட்ராய்டு 15 இயங்குதளம் உடையது.

  • பின்புறம் 50MP- யில் மூன்று முதன்மை கேமராக்கள் உள்ளன.

ஆக. 21ஆம் தேதி இரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30) ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் விற்பனைக்கு கிடைக்கும்

இதையும் படிக்க | ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!

Redmi Note 15 Pro+ Display, Battery Specifications Confirmed Days Ahead of Launch in China

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் காளைகள் தங்கள் பிடியை இறுக்கியதால், இந்திய பங்கு குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக லாபத்தில் முடிவடைந்தன. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை கொள்முதல் செய்ததும், அத... மேலும் பார்க்க

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

நேற்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(ஆக. 19) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,319.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக.19), கிராமுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.வாரத்தின் துவக்க நாளான நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

மும்பை: வெல்டிங் எலக்ட்ரோட்ஸ் மற்றும் எம்ஐஜி கம்பிகள் உற்பத்தியாளரான கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) லிமிடெட், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு, பங்கிற்கு ஒன்றுக்கு ரூ.82 முதல் ரூ.87 என நிர்ணயித... மேலும் பார்க்க

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

புதுதில்லி: தீபாவளிக்குள் ஜிஎஸ்டி-யில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்வதற்கான திட்டங்களால், ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன. இதனை தொடர்ந்து... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!

புதுதில்லி: வலுவான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் ஆதரவுடன் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவடைந்தது.பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் ... மேலும் பார்க்க