செய்திகள் :

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

post image

நேற்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(ஆக. 19) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,319.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 320.52 புள்ளிகள் அதிகரித்து 81,593.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88.10 புள்ளிகள் உயர்ந்து 24,965.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்று ஓலா எலக்ட்ரிக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.

மும்பை பங்குச்சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% உயர்ந்துள்ளன. துறைகளில், ஆட்டோ, மீடியா, எண்ணெய் & எரிவாயு, தொலைத்தொடர்பு குறியீடு தலா 0.5% உயர்ந்துள்ளன.

அதேநேரத்தில் பஜாஜ் பின்சர்வ், ஹிண்டால்கோ, கிராஸிம், பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் கொண்டுவரப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல உலகளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி சந்திப்பு நேர்மறையாக முடிந்துள்ளதால் ரஷியா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வாரத்தில் 2-வது நாளாக பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

stock market update: Sensex gains over 200 pts, Nifty above 24,900

இதையும் படிக்க | கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக.19), கிராமுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.வாரத்தின் துவக்க நாளான நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

மும்பை: வெல்டிங் எலக்ட்ரோட்ஸ் மற்றும் எம்ஐஜி கம்பிகள் உற்பத்தியாளரான கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) லிமிடெட், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு, பங்கிற்கு ஒன்றுக்கு ரூ.82 முதல் ரூ.87 என நிர்ணயித... மேலும் பார்க்க

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

புதுதில்லி: தீபாவளிக்குள் ஜிஎஸ்டி-யில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்வதற்கான திட்டங்களால், ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன. இதனை தொடர்ந்து... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!

புதுதில்லி: வலுவான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் ஆதரவுடன் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவடைந்தது.பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடக்கம்!

இந்தியாவில் ஐபோன் 17 தயாரிப்புப் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஐபோன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் தொடங்கிய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன. டிரம்ப் மற்றும் புடின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையி... மேலும் பார்க்க