செய்திகள் :

கர்நாடகத்தில் ரெட் அலர்ட்! தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிப்பு!

post image

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து அளவுக்கு அதிகமான கனமழை பெய்து வருவதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு ”ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்றும் (ஆக.19) கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், தார்வாட், சிக்கமகளூரு, பெலகாவி, கார்வார், ஹாசன், பிதார் மற்றும் மடிகேரி ஆகிய மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு மற்றும் ஷிமோகா ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வரும் ஆக.20 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கடலோரம் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கர்நாடக பேரிடர் மீட்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஹாசன் மாவட்டத்தின், ஷிராடி மலைப் பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் கர்நாடகத்திலுள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை மற்றும் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி நீர்தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

Red alert has been issued for 4 districts in Karnataka due to the intensification of monsoon rains.

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினர். முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு அணைகள், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தின் பத்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஆக.19) ரஷியா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, மத்திய வெளியுறவுத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் மீண்டும் ஏற்றுமதி: சீனா உறுதி!

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யப்ப்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்துள்ளார்.சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில், கடந்த ஆக.14 ஆம் தேதி, மாலை... மேலும் பார்க்க