செய்திகள் :

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

post image

கேரளத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு அணைகள், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் "இரண்டாவது" மற்றும் "மூன்றாம் நிலை எச்சரிக்கையில்" உள்ளது.

பாலக்காட்டில் மீன்கரா, வாலையார் மற்றும் சிறுவாணி உள்ளிட்ட பல்வேறு அணைகளின் ஷட்டர்கள் மற்றும் மூலத்தாரா ரெகுலேட்டர் ஆகியவை அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காகத் திறக்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தனம்திட்டாவில் உள்ள அச்சன்கோயில், திருச்சூரில் உள்ள கருவண்ணூர் போன்ற ஆறுகளின் நீர்மட்டம், நீர்ப்பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியம் (IDRB) மற்றும் மத்திய நீர் ஆணையம் (CWC) படி "மஞ்சள் எச்சரிக்கை" நிலைக்கு உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வடக்கு கேரள மாவட்டங்களான வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் மாநிலத்தின் மற்ற 6 மாவட்டங்களுக்கு "மஞ்சள் எச்சரிக்கை" விடுத்துள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும், மஞ்சள் எச்சரிக்கை என்றால் 6 செ.மீ முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யும் என்பதாகும்.

Heavy rains in Kerala, especially in its central and northern districts, caused a rise in water levels in various dams and rivers in the state on Tuesday.

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினர். முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ரெட் அலர்ட்! தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிப்பு!

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொடர்ந்து அளவுக்கு அதிகமான கனமழை பெய்து வருவதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஆக.19) ரஷியா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, மத்திய வெளியுறவுத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் மீண்டும் ஏற்றுமதி: சீனா உறுதி!

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யப்ப்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்துள்ளார்.சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமா... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில், கடந்த ஆக.14 ஆம் தேதி, மாலை... மேலும் பார்க்க