செய்திகள் :

மும்பையில் தொடரும் கனமழை; சுரங்க சாலை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கார்: நீந்தி உயிர் தப்பிய இருவர்

post image

மும்பையில் நான்கு நாள்கள் தொடரும் மழை

மும்பையில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை மும்பையில் 170 மிமீ அளவுக்கு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விக்ரோலியில் அதிக பட்சமாக 194 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. மும்பை வடாலா பகுதியில் மழையின் போது டாக்சிக்காக காத்திருந்த தாய், மகன் மீது மாநகராட்சி பஸ் ஒன்று மோதியதில் அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் ராய்கட், ரத்னரி, கோலாப்பூர், சதாரா, புனேயில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையையொட்டி இருக்கும் தானே மாவட்டத்தில் கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

சுரங்க பாதையில் சிக்கிய கார்

நரிவாலி மற்றும் உத்தவ்சிவ் கிராமங்களிடையே மேம்பாலத்திற்கு கீழே வாகனங்கள் செல்ல பைபாஸ் சாலை ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

இந்த சுரங்க பாதையில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தண்ணீர் பல அடி உயரத்திற்கு சென்ற நிலையில் கார் ஒன்று அதனை கடக்க முயன்று நடு வழியில் சிக்கிக்கொண்டது.

வெள்ளத்தில் சிக்கிய கார்

இதனால் காரில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். தண்ணீர் காருக்குள் வந்துவிட்டது. அந்நேரம் அதனை கவனித்த இரண்டு பேர் காரில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் நீந்தி கார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

காரின் முன்பகுதி தண்ணீரில் கவிழ்ந்த நிலையில் இருந்தது. இதனால் நீந்தி வந்த இரண்டு பேரில் ஒருவர் காரின் மேல் பின்புறம் ஏறி நின்று காரை சமநிலைப்படுத்த முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

இதையடுத்து காருக்குள் இருந்தவர்களிடம் உடனே வெளியில் வெளியில் வரும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து கார் கதவை திறந்து கொண்டு இரண்டு பேரும், தண்ணீரில் நீச்சலடித்து பாதுகாப்பாக வெளியில் வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

கல்யான் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 4 வீடுகள் சேதம் அடைந்தன. தானே கோட்பந்தர் சாலையில் மிகப்பெரிய பாறை கல் ஒன்று மலையில் இருந்து சாலையில் விழுந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவலர்கள் உடனே விரைந்து செயல்பட்டு அக்கல்லை அப்புறப்படுத்தினர்.

மாநிலத்தில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகர் மண்டலத்தில் மழையால் 800 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த மதிப்பெண்; பெற்றோருக்கு பயந்து மும்பை கிளம்பிய கர்நாடக சிறுமிகள் - மீட்டது எப்படி?

நடிகர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி மைனர் சிறார்கள் மும்பைக்கு வருவது வழக்கம். ஆனால் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு மைனர் சிறுமிகள் பள்ளி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் பெற்றோருக்கு பயந்... மேலும் பார்க்க

தோட்டங்களில் காணப்படும் முடியில்லா 'ஸோம்பி அணில்கள்’ - மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

அமெரிக்காவில் பொதுவாக அழகாகக் கருதப்படும் அணில்கள், தற்போது புண்கள் மற்றும் முடியில்லாமல் ‘ஸோம்பி அணில்கள்’ என்று அழைக்கப்படும் வினோதமான தோற்றத்தில் காணப்படுகின்றன.இந்த அசாதாரண நிலைக்கு ஸ்குரல் ஃபைப்ர... மேலும் பார்க்க

25 கோடி ரூபாய் மதிப்பில் தேநீர் பாத்திரம் - உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக இருப்பது ஏன்?

ஒரு தேநீர் பாத்திரம், பல ஆடம்பர கார்களை விட மதிப்பு மிக்கதாக இருக்க முடியுமா? “தி ஈகோயிஸ்ட்” என்ற இந்த தேநீர் பாத்திரம், உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 2016ஆம... மேலும் பார்க்க

ரூ.2.96 கோடி ஓய்வு பணம்; மனைவியை தவிர்த்து தனியே வாழ்ந்த நபர் - கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

ஓய்வுக்காலத்தில் தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ முடிவு செய்த ஒரு ஜப்பானிய ஆணின் கதை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.ஜப்பானைச் சேர்ந்த டெட்சு யமடா என்பவர் தனது 60 வயதில் ஓய்வு பெற்றிருக்கிறார... மேலும் பார்க்க

மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான வெளிநாட்டு இந்தியர்!

இந்தியாவை சேர்ந்த பரிசிட் பலூசி என்பவர் துபாயில் நீண்ட நாட்களாக வசித்து வருகிறார். அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தார். அவர் மும்பையில் வந்து இறங்க... மேலும் பார்க்க

"என்னை ஏன் திருமணம் செய்தாய்?" - வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கேள்வியும், இந்தியரின் பதிலும்!

இந்தியர் ஒருவர் தனது அமெரிக்க மனைவியிடம், அவரைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.அந்த வீடியோவில் வரும் கணவன் மனைவியின் பெயர் அனிக... மேலும் பார்க்க