செய்திகள் :

ராகுல் எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார்; பின்வாங்கவும் மாட்டார்: பிரியங்கா காந்தி

post image

எந்த தாக்குதலுக்கும் ராகுல் காந்தி பயப்படமாட்டார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

பிகாரின் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,

வாக்குத் திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தி எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார். அவர் எல்லாவற்றையும் சமாளிப்பார். ஒருபோதும் பின்வாங்கமாட்டார். ராகுல் காந்தியால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. மாறாக, பிரமாணப் பத்திரம், நேரு, இந்திரா என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த 10-11 ஆண்டுகளில் தங்கள் பொறுப்பிலிருந்து நழுவுவதற்காக பாஜகவினர், நேருவை பல விஷயங்களுக்கு குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு இன்று என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேச வேண்டும். பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் செய்யப்படுகிறது என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும், வாக்குத் திருட்டு பிரச்னை பற்றி பேச வேண்டும். வாக்குத் திருட்டு உண்மையல்ல என்றால் மக்களிடம் சொல்லுங்கள்" என்று கூறினார்.

Congress General Secretary Priyanka Gandhi has said that Rahul Gandhi will not be afraid of any attack.

இதையும் படிக்க |இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினர். முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ரெட் அலர்ட்! தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிப்பு!

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொடர்ந்து அளவுக்கு அதிகமான கனமழை பெய்து வருவதால், 4 மாவட்டங்களுக்கு ”ரெட்... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு அணைகள், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தின் பத்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஆக.19) ரஷியா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, மத்திய வெளியுறவுத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்க இயந்திரங்கள் மீண்டும் ஏற்றுமதி: சீனா உறுதி!

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உரங்கள், சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யப்ப்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்துள்ளார்.சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமா... மேலும் பார்க்க