செய்திகள் :

'சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா; பொன்முடியும் செந்தில் பாலாஜியும்..!'- நெல்லையில் அமித் ஷா

post image

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லை என்று வருந்துகிறேன்.

மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவர் பாஜக-விற்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார்.

அமித்ஷா
அமித்ஷா

தமிழகத்தைச் சேந்த சி.பி.ராதகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவைக் கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார். தமிழ் மண், மக்கள், மொழி மீது பிரதமர் மோடி பற்றுக்கொண்டிருக்கிறார்.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளின் முதுகெலும்பை முறித்துக்காட்டியவர் பிரதமர். நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா கொண்டு வரப்பட்டது.

பிரதமர்கள், அமைச்சர்கள், குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்கக் கூடாது என்று அந்த மசோதா கூறுகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் சிறை சென்றாலும் பதவியில் நீடிக்கின்றனர். சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா? இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின் கருப்பு சட்டம் என்று இந்த மசோதாவைக் கூறுகிறார்.

அமித் ஷா
அமித் ஷா

தமிழ் மக்களை முன்னேற்றுவதற்கானக் கூட்டணிதான் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி. தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். திமுகவின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவது தான். நான் சொல்கிறேன் ஒரே நாளும் உதயநிதி முதல்வராக முடியாது. அதேபோல ராகுல் காந்தி பிரதமராக முடியாது. திமுக-வை தமிழகத்தில் வேறோடு பிடுங்கி எறிய வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Sasikala: சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறு? திமுக நிர்வாகி மீது புகார்; பின்னணி என்ன?

சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா ஆதரவாளர்கள் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ... மேலும் பார்க்க

'பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது நமது கடமை'- பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேசியது என்ன?

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். மேலும் பாஜக நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சிரிப்பலை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அபகரிப்பு’ புகாரில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார்; களமிறங்கிய கவர்னர்; பின்னணி என்ன?

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும், ரௌடிகள் மற்றும் போலிப் பத்திரங்கள் மூலம் அபகரிப்பது தொடர் கதையாகி வருகிறது. அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசியல... மேலும் பார்க்க