செய்திகள் :

Sasikala: சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறு? திமுக நிர்வாகி மீது புகார்; பின்னணி என்ன?

post image

சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா ஆதரவாளர்கள் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா
சசிகலா

ஜெ.ஆர்.சுரேஷ் என்பவர் தலைமையில் வந்த ஆதரவாளர்கள் அளித்த புகார் மனுவில், "அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை இழிவுபடுத்தும் வகையிலும் அவர்களின் பெண்மைக்கும், அதிமுக நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் 'MAI Chennai 360' என்ற YouTube சேனலில் திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் என்பவர் பேசியுள்ளார்.

வி.கே.சசிகலாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் குடியாத்தம் குமரன் பேசியுள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மனக்குமுறலையும், மன உளைச்சலையும் உண்டாக்கி உள்ளது.

எனவே MAI Chennai 360 YouTube சேனலில் பரப்பப்பட்டுள்ள வீடியோவை தடை செய்து, திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் மீது சட்டப்படியான கைது நடவடிக்கை எடுத்தும், MAI Chennai 360 YouTube சேனலை நிரந்தரமாகத் தடை செய்யவும் வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

புகார் அளிக்க வந்த சசிகலா ஆதரவாளர்கள்
புகார் அளிக்க வந்த சசிகலா ஆதரவாளர்கள்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்கள், "கோடிக்கணக்கான தொண்டர்களால் பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சசிகலா குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுத்தும் பேசிய குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர் பேசிய யூடியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். குடியாத்தம் குமரன் இனி இதுபோன்று பேசினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்" என்றனர்.

வழக்கறிஞர் ஸ்டாலினுடன் சசிகலா ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா; பொன்முடியும் செந்தில் பாலாஜியும்..!'- நெல்லையில் அமித் ஷா

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர்... மேலும் பார்க்க

'பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது நமது கடமை'- பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேசியது என்ன?

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். மேலும் பாஜக நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சிரிப்பலை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அபகரிப்பு’ புகாரில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார்; களமிறங்கிய கவர்னர்; பின்னணி என்ன?

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும், ரௌடிகள் மற்றும் போலிப் பத்திரங்கள் மூலம் அபகரிப்பது தொடர் கதையாகி வருகிறது. அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசியல... மேலும் பார்க்க