செய்திகள் :

வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!

post image

வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 311 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நிகழாண்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை 27,782 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒரே நாளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2025-ல் அந்நாட்டில் டெங்குவுக்கு பலியானோரது எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, வங்கதேசத்தின் சுகாதாரத் துறை, அந்நாட்டின் 64 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், டெங்கு காய்ச்சலின் பரவல் வேகமெடுக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 1,705 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பலியானார்கள்.

மேலும், கடந்த 2024-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியதுடன், 575 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!

In Bangladesh, 5 people have reportedly died of dengue fever in a single day.

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டின் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்ல... மேலும் பார்க்க

வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாத அமைப்பான போகோ ஹராமின், மூத்த தலைவரைக் கொன்றுள்ளதாக நைஜர் நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான போகோ ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு வசிரிஸ... மேலும் பார்க்க

5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!

அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி வ... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!

அரசு நிதியை சொந்த காரணங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது அரசு நிதியில் சொந்தமாக பயணங... மேலும் பார்க்க

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார்.சீனாவின் வெளியுறவுத் துறை அ... மேலும் பார்க்க