செய்திகள் :

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

post image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸான் வார்சாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு நேற்று (ஆக.21) தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு திடீரென தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியைக் கைபற்றிய பாதுகாப்புப் படையினர் அங்கு பாகிஸ்தானின் தேசிய கொடியை ஏற்றியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேபோல், பன்னூ மாவட்டத்தில் ஓய்வுப் பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரரான அடாவுல்லா என்பவரை கடத்த முயன்ற, ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அவரைக் கொலைச் செய்துவிட்டு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!

15 militants have been killed in a gunfight with security forces in Pakistan's Khyber Pakhtunkhwa province, it has been reported.

5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!

அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி வ... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!

அரசு நிதியை சொந்த காரணங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது அரசு நிதியில் சொந்தமாக பயணங... மேலும் பார்க்க

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார்.சீனாவின் வெளியுறவுத் துறை அ... மேலும் பார்க்க

300 கிலோ எடையுடன் சிறைக்கைதி! ஒருநாள் பராமரிப்புச் செலவு ரூ.1 லட்சமா?

ஆஸ்திரியா நாட்டில், 300 கிலோ எடையுடன், சிறையில் ஒரு கைதி அடைக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு சராசரி சிறைக் கைதிக்கான பராமரிப்புச் செலவை விட பத்து மடங்கு அதிகம் இவருக்கு மட்டும் செலவாவதாகவும் தகவல்கள் வெளிய... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! - சீனா

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் கூறியுள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன்... மேலும் பார்க்க

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோரியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் ... மேலும் பார்க்க