செய்திகள் :

தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா

post image

நெல்லை: தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.

நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பிரமாண்டமாகத் தொடங்கியிருக்கிறது நெல்லை பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்க உள்துறை அமைச்சர் புது தில்லியிலிருந்து நெல்லை வந்தார்.

பாஜக மாநில தலைவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றிய நிலையில், நெல்லை பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வருகிறார்.

அவர் பேசுகையில், மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். பாஜகவுக்காக பல தியாகங்கள் செய்தவர் இல. கணேசன்.

தமிழ் மண், தமிழக மக்கள், தமிழ் மொழி மீது அதீத பற்று கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் பிரதமர் மோடி. சோழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார் என்றும் கூறினார்.

திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித் ஷா பேச்சு!

நெல்லை: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் வரும் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.வரும் சட்டப்பேரவைத் ... மேலும் பார்க்க

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார். திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள்... மேலும் பார்க்க

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

நெல்லை: திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றும், ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு மற்ற வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சா... மேலும் பார்க்க

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு தொடங்கியது

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் அருகே பாஜக பூத் கமிட்டி மாநாடு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்புரையாற்றுகிறாா். மேலும் மாநாட்டில் திருநெ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது கடமை: அண்ணாமலை

நெல்லை: தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களின் கடமை என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.அமித் ஷா தலைமையில் நெல்லையில் பாஜக பூ... மேலும் பார்க்க

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக: நயினார் நாகேந்திரன்

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி இன்று மாலை 6 மணி அளவில் தச்சநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற... மேலும் பார்க்க