செய்திகள் :

குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!

post image

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார்.

ஆக்ஸியம் மிஷன் - 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான, சுபான்ஷு சுக்லா, கடந்த மாதம் பூமிக்குத் திரும்பினார். இதையடுத்து, அவரது இந்தப் புதிய சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தியா வந்த சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடியை, கடந்த ஆக.18 ஆம் தேதி நேரில் சந்தித்து, விண்வெளிக்கு அவர் கொண்டுச் சென்ற தேசிய கொடி உள்ளிட்டவற்றை பிரதமருக்கு பரிசளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, அவர் இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்தச் சந்திப்பில், குடியரசுத் தலைவருடன் தனது விண்வெளி அனுபவங்களை அவர் பகிர்ந்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க: ராஜஸ்தானில் வெளுத்துவாங்கும் கனமழை: 2 பேர் பலி!

Indian astronaut Subhanshu Shukla met and spoke to President Draupadi Murmu today (August 22).

வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு: வாரணாசியில் ஆசிரியர் கொலை

வாரணாசியில் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஆதர்ஷ் சிங்கிற்கும், பிரவீன் ஜாவிற்கும் இடையே வியாழக்... மேலும் பார்க்க

ஆக.25ல் ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

குஜராத்திற்கு ஆகஸ்ட் 25ல் வருகைதரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என குஜராத் முதல்வர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் வெளுத்துவாங்கும் கனமழை: 2 பேர் பலி!

ராஜஸ்தானின் பெய்த கனமழைக்கு 2 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாள்களாக ராஜஸ்தானில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

கறைபடிந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா? மௌனம் கலைத்தார் மோடி

கறைபடிந்த நபர்கள் பிரதமராகவோ, முதல்வராகவோ, அமைச்சராகவோ ஏன் பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.மத்திய அரசு கொண்டு வந்த பதவி நீக்க சட்ட மசோதாவுக்கு எதிர்ப்ப... மேலும் பார்க்க

தாக்குதல் சம்பவம்: முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!

தில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் முதல்முறையாக காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். காந்தி நகர் மொத்த விற்பனை சந்தையின் ஆடை கண்காட்சியான வஸ்த்ரிகாவின் தொ... மேலும் பார்க்க

கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இன்று சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசும்போது, ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், ஆர்எஸ்எஸ் பாடல... மேலும் பார்க்க