`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சி...
கறைபடிந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா? மௌனம் கலைத்தார் மோடி
கறைபடிந்த நபர்கள் பிரதமராகவோ, முதல்வராகவோ, அமைச்சராகவோ ஏன் பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த பதவி நீக்க சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சிறையில் இருந்துகொண்டு முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், சிறையில் இருந்துகொண்டு செயல்பட ஏன் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஒருவர் அரசு ஊழியராக இருந்து, அவர் கைது செய்யப்பட்டு 50 மணி நேரம் சிறையில் வைக்கப்பட்டிருந்தால், தன்னிச்சையாகவே, அவர் வேலையை இழந்துவிடுவார், அது ஓட்டுநராக இருந்தாலும் சரி, கிளெர்க், பியூனாக இருந்தாலும் சரி. ஆனால், ஒருவர் முதல்வராக, அமைச்சராக, பிரதமராக இருந்தால், அவர் அந்தப் பதவியிலேயே இருப்பார், சிறையில் இருந்தாலும் கூட என்று, நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியிருந்த மூன்று சட்டத்திருத்த மசோதாக்கள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி.
சிறையிலிருந்து அரசை நடத்த ஏன் அனுமதிக்க வேண்டும்? கறைபடிந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா? தங்களது தலைவர்கள் சிறந்த ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.