செய்திகள் :

ராஜஸ்தானில் வெளுத்துவாங்கும் கனமழை: 2 பேர் பலி!

post image

ராஜஸ்தானின் பெய்த கனமழைக்கு 2 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக ராஜஸ்தானில் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சவாய் மதோபூர், டோங்க், கோட்டா மற்றும் பில்வாரா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின.

சவாய் மதோபூரில், பல்லிபர் பகுதியில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக 254 மிமீ மழை பதிவாகியுள்ளதாக ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக ஒரு மதகு இடிந்து விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலை-552 இல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது, இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பில்வாராவின் பிஜோலியாவில், 24 மணி நேரத்தில் 170 மிமீ மழை பெய்ததால் பஞ்சன்புரா அணை நிரம்பியுள்ளது. எரு நதி வெள்ளத்தில் மூழ்கியது.

இதேபோல், கோட்டாவில், கோட்டா தடுப்பணையின் மூன்று கதவுகள் அதிகாலையில் திறக்கப்பட்டு 25,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூண்டியின் கப்ரென் நகரில் உள்ள பல தாழ்வான காலனிகள் நீரில் மூழ்கி, நீர்மட்டம் உயர்ந்ததால் கிராமப்புறங்களுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இடைவிடாத மழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். அஜ்மீரில் தனது நண்பர்களுடன் அணையில் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வந்திருந்த அவர் இரவு அணையில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.

ஜெய்ப்பூரின் சக்சு பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் பெருக்கெடுத்த துந்த் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உள்ளூர் மக்கள் கணவரை காப்பாற்றினர், ஆனால் மனைவி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

வானிலை ஆய்வுமையம் இன்று உதய்பூர், துங்கர்பூர், பன்ஸ்வாரா மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

கிழக்கு ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும் மேற்கு மாவட்டங்களில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Torrential rains pounded parts of Rajasthan on Friday, leaving two persons dead and submerging several low-lying areas in Sawai Madhopur, Tonk, Kota and Bhilwara districts, officials said.

வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு: வாரணாசியில் ஆசிரியர் கொலை

வாரணாசியில் நிறுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஆதர்ஷ் சிங்கிற்கும், பிரவீன் ஜாவிற்கும் இடையே வியாழக்... மேலும் பார்க்க

ஆக.25ல் ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

குஜராத்திற்கு ஆகஸ்ட் 25ல் வருகைதரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என குஜராத் முதல்வர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இன்று (ஆக.22) நேரில் சந்தித்து உரையாடினார். ஆக்ஸியம் மிஷன் - 4 மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீர... மேலும் பார்க்க

கறைபடிந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா? மௌனம் கலைத்தார் மோடி

கறைபடிந்த நபர்கள் பிரதமராகவோ, முதல்வராகவோ, அமைச்சராகவோ ஏன் பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.மத்திய அரசு கொண்டு வந்த பதவி நீக்க சட்ட மசோதாவுக்கு எதிர்ப்ப... மேலும் பார்க்க

தாக்குதல் சம்பவம்: முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!

தில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் முதல்முறையாக காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். காந்தி நகர் மொத்த விற்பனை சந்தையின் ஆடை கண்காட்சியான வஸ்த்ரிகாவின் தொ... மேலும் பார்க்க

கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இன்று சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசும்போது, ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், ஆர்எஸ்எஸ் பாடல... மேலும் பார்க்க