செய்திகள் :

தர்மபுரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

post image

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதியில் ஓரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்குயில் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

ஆகஸ்ட் 22ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 23ல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

22-08-2025 மற்றும் 23-08-2025: வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The Meteorological Department has stated that heavy rain is likely to occur in 10 districts of Tamil Nadu today.

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக: நயினார் நாகேந்திரன்

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி இன்று மாலை 6 மணி அளவில் தச்சநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற... மேலும் பார்க்க

தனி ஆள் அல்ல, கடல் நான்... விஜய் பகிர்ந்த செல்ஃபி விடியோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்றைய (ஆக.21) மாநாட்டில் எடுத்த செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார். மதுரை பாரபத்தியில் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை)... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகிறார்!

இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள்(ஆக. 24) தமிழகம் வரவிருக்கிறார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செ... மேலும் பார்க்க

தங்கம் விலை இன்று குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 400 ... மேலும் பார்க்க

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வு: அருந்ததியருக்கு கூடுதல் வாய்ப்பு

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வுகளில், தாழ்த்தப்பட்ட அருந்ததியா் வகுப்பினருக்கு கூடுதல் வாய்ப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அளித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப்... மேலும் பார்க்க