செய்திகள் :

இந்தியா அணை கட்டினால் அழித்து விடுவோம்! பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

post image

சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அதில், சிந்து நதி நீர் பகிர்வு ரத்தும் அடங்கும். பாகிஸ்தானில் 80 சதவிகித விவசாய நிலங்களுக்கு சிந்து நதிதான் நீராதாரமாக இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் ஒரு துளி நீர்கூட பாகிஸ்தானுக்கு சென்றடையாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சிந்து நதிப் படுகையில் இந்தியா அணை ஏதேனும் கட்டினால், பாகிஸ்தான் என்ன செய்யும்? என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்த பதிலில், ``சிந்து நதிப் படுகையில் இந்தியா அணை கட்டினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பாக இருக்கும். எவ்வளவு பாதுகாப்பான கட்டடக்கலையாலும் இந்தியா அணை கட்ட முயற்சித்தாலும், பாகிஸ்தான் அதனை அழித்து விடும்’’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும்விதமாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரான கவாஜா, வெற்று அச்சுறுத்தல்களை மட்டுமே வெளியிடுகிறார்.

அவர் வெறுமனே ஒரு `அறிவிப்புத் துறை அமைச்சராக’ மட்டுமே உள்ளார்.

பாகிஸ்தானியர்களிடையே உள்ள அச்சம், அவர்களின் வெற்று அச்சுறுத்தல்கள் மூலம் தெரிகிறது. அவர்கள், இரவில் தங்கள் தூக்கத்தை இழந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

சத்தீஸ்கரில் 15 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 15-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் கர்ரேகுட்டா மலைப்பகுதி அருகே இன்று(புதன்கிழமை) பாதுகாப்புப் படையினரின் க... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் மோடி ஆலோசனை!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து வருகிறார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவட... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது குறித்து பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட முறை... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக முதல்வரின... மேலும் பார்க்க

அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது ஏன்?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க