செய்திகள் :

Operation Sindoor : `ஜெய்ஷ்-இ-முகமது’ மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் பலி - பிபிசி தகவல்

post image

கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியப் படை 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதும் பாகிஸ்தானின் 4 இடங்களில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் திவிரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

பஹவல்பூரில் உள்ள மர்காஸ் சுபனலா, தெஹ்ரா கலனில் சர்ஜால், கோட்லியில் மர்காஸ் அப்பாஸ், முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய தளங்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவை.

முர்டிகேயில் மர்காஸ் தைபா, பர்னாலாவில் மர்காஸ் அஹ்லே ஹதீத், முசாஃபராபாத்தில் உள்ள ஷ்வாவாய் நல்லா முகாம் ஆகியவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவை.

கோட்லியில் மக்காஸ் ரஹீல் ஷாஹித் மற்றும் சியால்கோட்டில் மெஹ்மூனா ஜோயா ஆகிய இடங்கள் ஹிஸ்புல் முஜாஹிதீனின் முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளானவை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஒன்பது இடங்களில் நான்கு பாகிஸ்தானிலும், ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்தன. இந்த நிலையில், பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

மசூத் அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தின் ஐந்து குழந்தைகள் எனப் 10 பேர் கொல்லப்பட்டதாக பிபிசி உருது தகவ்ல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் பெரிய நகரமான பஹாவல்பூர், லாகூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த சுபானலா முகாம், உஸ்மான்-ஓ-அலி வளாகம் என்றும் அழைக்கப்படுகிறது.

Operation Sindoor: "இந்தியாவின் தாக்குதல் நியாயமானது!" - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஆதரவு

தீவிரவாதிகள் குழுவினர் ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் ... மேலும் பார்க்க

Operation Sindoor: "நம் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம்" - ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: '1000 இளைஞர்களுடன் யுத்த களத்திற்கு செல்ல தயார்'- கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்த... மேலும் பார்க்க

Operation Sindoor: `இந்திய ராணுவ நடவடிக்கையை வரவேற்கிறேன்; அதேசமயம் இது..."- திருமாவளவன் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்க... மேலும் பார்க்க

`போர் வேண்டாம்; பாகிஸ்தான் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்... பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட்... மேலும் பார்க்க