செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

post image

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைத்து தலைவர்களும் இந்திய முப்படைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை செயலரும் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளித்து ஆதாரங்களையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நாளை (மே 7) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க : பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?

18 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகா் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ‘ஆப்ப... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ எனும் அதிதுல்லியத் தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரா்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி’ என்று மத்திய... மேலும் பார்க்க

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம்: காங்கிரஸ்

இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமா்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்களிடம் சமா்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது. ... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. சிபிஐ இயக்குநராக 2 ஆண்டு பதவிக் காலத்துக்கு பிரவீண் சூட், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மா... மேலும் பார்க்க