செய்திகள் :

இந்தியா உடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

post image

இந்தியா உடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் இந்தியா அதிக வரி வசூலிப்பதாகவும், இதனால், இந்தியாவில் வணிகம் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது,

வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் அதிக வரி வசூலிக்கிறது இந்தியா.

பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்க வேண்டும்.

அமெரிக்காவிடம் அதிக பொருள்களை விற்கிறது இந்தியா. ஆனால், எங்களிடமிருந்து குறைவாகவே வாங்குகிறது. அதாவது, இந்தியாவுடன் குறைந்த அளவே வணிகம் செய்கிறோம். அதற்கு காரணம், இப்போது வரை இந்தியா எங்களிடம் அதிக வரியை வசூலிக்கிறது. இதனால், எங்கள் பொருள்களை இந்தியாவில் வணிகம் செய்ய முடியவில்லை. இது முழுவதும் ஒருதலைபட்சமான பேரழிவு எனப் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 3,100 கிராமங்கள்! 24 லட்சம் மக்கள் பாதிப்பு!

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாபின் 3,100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பஞ்சாபில் பெய்த கனமழையாலும், அங்குள்ள முக்கிய... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்?

தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மாகாணங்களே முழுமையாக நாசமாகியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை காலைதான் அந்த செய்தி வெள... மேலும் பார்க்க

இந்தோனேசியா: இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியா நாட்டின் வனப்பகுதியில், இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்று மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் உள்ள வி... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: 900 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. 3000 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குனார், நாங்கர்ஹார் மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிலநடுக்... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! உதவி கோரும் தலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவ வெளிநாடுகள் முன்வர வேண்டும் என்று தலிபா... மேலும் பார்க்க

சூடான் நிலச்சரிவில் புதைந்த கிராமம்! 1000 பேர் பலி!

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிழைத்துள்ளதாக சூடான் விடுதலை... மேலும் பார்க்க