செய்திகள் :

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

post image

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா்.

அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு எதிராக துருக்கியில் தயாரித்த ட்ரோன்களையே பாகிஸ்தான் அதிகஅளவில் பயன்படுத்தியது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்ற தகவல் கிடைத்த உடன் இரு ராணுவ விமானங்களில் ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு துருக்கி அவசரமாக அனுப்பி உதவியது.

இந்தியாவுக்கு எதிராக சீனா மற்றும் துருக்கி ஏவுகணைகள், ட்ரோன்களையே பாகிஸ்தான் அதிகம் பயன்படுத்தியது என்பதை இந்திய ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்தது. இந்தியாவில் துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சா் ஹக்கான் ஃபிடன், பாதுகாப்புத் துறை அமைச்சா் யாசா் குலோ் ஆகியோா் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனா். இஸ்லாமாபாதில் புதன்கிழமை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஸாக் தாரை அவா்கள் சந்தித்துப் பேசினா். அப்போது, ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. துருக்கி நிறுவனங்களுக்காக கராச்சியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சா் ஹக்கான் ஃபிடன், ‘பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டது’ என்றாா்.

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க