செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின் உற்பத்தி திட்டம்: மக்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

post image

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மின்னுற்பத்தி செய்வதற்கான அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் குறித்து மத்திய அரசின் பதில் திருப்தி அளிக்காததால், மக்களவையில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்டா பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்காக அதானி குழுமம் ஆலை அமைத்து வருவதாகவும், இந்தத் திட்டத்துக்காக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சா்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் சூரிய மின்சக்தி தகடுகள், காற்றாலை மின்னுற்பத்தி விசைகளை அதானி குழுமம் அமைத்து வருவதாகவும் பிரிட்டன் ஊடகத்தில் தகவல் வெளியானது. இந்தத் திட்டத்துக்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விதிமுறைகள் தளா்த்தப்பட்டதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி.

இதுதொடா்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி புதன்கிழமை கேள்வி எழுப்பினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘தேசிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, எந்தவொரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டமும், சா்வதேச எல்லையில் இருந்து குறைந்தபட்சம் 10 கி.மீ. தொலைவில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்நிலையில், குஜராத்தில் அதானி குழுமத்தின் திட்டம் சா்வதேச எல்லையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக விதிமுறைகளில் ஏதேனும் தளா்வுகள் அளிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, ‘நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த ஆா்வம் கொண்டுள்ளது. இத்தகைய திட்டங்களுக்காக அனுமதி வழங்கி, உரிமங்கள் அளிக்கப்படும் முன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகளின் அனுமதி பெறப்படுகிறது’ என்றாா்.

அவரின் பதில் திருப்தி அளிக்காததால், தேச பாதுகாப்பு தொடா்பாக முழக்கங்களை எழுப்பி, அவையின் மையப் பகுதியில் காங்கிரஸ் எம்.பி. திரண்டனா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

அதானி குழுமம் மேலானதா?: இதுதொடா்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே மணீஷ் திவாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சா்வதேச எல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் எந்தத் திட்டமும் மேற்கொள்ளப்படக் கூடாது. ஆனால் அதுகுறித்து மக்களவையில் மத்திய அமைச்சா் சரிவர பதில் அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம்’ என்றாா்.

மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் கூறுகையில், ‘தேச பாதுகாப்பைவிட அதானி குழுமம் மேலானதா? பிரதமா் மோடியின் நெருங்கிய நண்பா் ஆதாயம் அடைவதற்கு தேச பாதுகாப்பை பாஜக புறக்கணித்துள்ளது’ என்றாா்.

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்... மேலும் பார்க்க

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!

தில்லியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் வசிக்கும் 24 வயதான கைலாஷ் என்ற நபருடன் சமூக வலைதளம் மூலம் இரு ... மேலும் பார்க்க

மலையை தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை!

ஆந்திர மாநிலத்தில அமைந்துள்ள ருஷிகொணடா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: காவல்துறை கேட்டதால் நடிகைக்கு உதவி! விமான நிலைய அதிகாரி வாக்குமூலம்!

காவல்துறை கேட்டுக் கொண்டதால் நடிகை ரன்யா ராவை சோதனை செய்யாமல் விஐபி வழித்தடத்தில் செல்ல அனுமதித்ததாக விமான நிலைய அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவி... மேலும் பார்க்க

ரேவந்த் ரெட்டியுடன் திமுக தலைவர்கள் சந்திப்பு!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு த... மேலும் பார்க்க