செய்திகள் :

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு: பிரதமர் மோடி

post image

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ‘பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் தாம் தொலைபேசியில் பேசியிருப்பதாகவும், அதன்போது, வரலாற்றிலொரு மைல்கல்லாக இந்தியாவும் பிரிட்டனும் தொலைநோக்குடைய இருதரப்புக்கும் பரஸ்பர பயனளிக்கிற தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதாக’ தெரிவித்திருக்கிறார்.

‘இதன்மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவும், வர்த்தகமும், முதலீடுகளும், வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும், புத்தாக்கங்களும் நமது பொருளாதாரத்தில் மேலும் ஊக்குவிக்கப்படும்’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தற்போது இரு நாடுகளிடையே சராசரியாக ரூ.1.73 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இதை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு அல்லது மூன்று மடங்காக உயா்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மே... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி- ஒவைசி மீண்டும் வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உறுதியான பதிலடி தரப்பட வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மீண்டும் வலியுறுத்தினாா். காஷ்மீருக்கு பய... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை: தோ்தல் வெற்றிக்கும் வாழ்த்து

ஆஸ்திரேலிய பிரதமராக தொடா்ந்து 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, தோ்தல் வெற்றிக்காக தனது வாழ்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- ராணுவ வீரா் உள்பட 4 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரா் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனா். 44 போ் காயமடைந்தனா். இவா்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை: மத்திய அரசிடம் 29 பெயா்கள் நிலுவை

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயா்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரிய... மேலும் பார்க்க