செய்திகள் :

இந்தியா பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்: பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தல்

post image

இஸ்லாமாபாத்: இந்தியா பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், இந்தியாவுடான மோதல் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்றுள்ள அந்நாட்டு எம்.பி.க்கள் குழு தலைவருமான பிலாவல் புட்டோ வலியுறுத்தியுள்ளாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அடுத்த பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத கடுமையான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததுடன், சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இது பாகிஸ்தான் தரப்புக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், இந்தியா நீரை நிறுத்தினால், பாகிஸ்தானில் மின்னுற்பத்தி தொடங்கி வேளாண்மை வரை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்தியா பேச்சு நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் அரசு கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்துவது குறித்து யோசிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்நிலையில் பெல்ஜியத்தின் பிரெஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் தூதுக் குழு தலைவா் பிலாவல் புட்டோ மேலும் கூறியதாவது:

ஒருங்கிணைந்த பேச்சுவாா்த்தை மூலம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வுகாண முடியும். இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தைக்கு வரமறுத்தால், நாங்களும் இந்தியாவுடன் இணக்கமாக செயல்பட முடியாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும்.

பாகிஸ்தானுக்கு வரும் நதிநீரை இந்தியா தடுத்தால், அது மோசமான செயலாகவே இருக்கும். இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்ள இந்தியாவுக்கு எதிராக போரிடுவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை.

சா்வதேச நாடுகள் இந்தியாவை பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தும் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் போரை விரும்புவதில்லை. அதே நேரத்தில் தேசப் பாதுகாப்பு, நதிநீதி உரிமை ஆகியவற்றில் வீட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்றாா்.

பிலாவல் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, அந்நாட்டில் ஆளும் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கீவ் நகரத்தின் மீது இன்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

சௌதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வாலீத் விபத்தில் சிக்கி சுமார் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் கண் விழித்துப் பார்த்து, தனது குடும்பத்தாருடன் இணைந்ததாக விடியோக்கள்... மேலும் பார்க்க

உச்சகட்டத்தை எட்டும் இஸ்ரேல் - ஈரான் மோதல்! செய்திகள் நேரலை...

தெஹ்ரானைவிட்டு வெளியேறுக!ஈரான் தலைநகர் தெஹ்ரானைவிட்டு அனைவரும் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பதற்றமாக சூழல் நிலவுகிறது.பங்கர் - பஸ்டர் குண்டுகள் மூலம் தெஹ்... மேலும் பார்க்க

தெஹ்ரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தெஹ்ரானிலுள்ள இந்தியவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் தொ... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.ஏற்கெனவே ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அ... மேலும் பார்க்க

டெஹ்ரானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 போர் விமானங்கள் தகர்ப்பு

ஈரான் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் தகர்க்கப்பட்டன.ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில... மேலும் பார்க்க