ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!
இந்தியா பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்: பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தல்
இஸ்லாமாபாத்: இந்தியா பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், இந்தியாவுடான மோதல் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்றுள்ள அந்நாட்டு எம்.பி.க்கள் குழு தலைவருமான பிலாவல் புட்டோ வலியுறுத்தியுள்ளாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அடுத்த பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத கடுமையான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததுடன், சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இது பாகிஸ்தான் தரப்புக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், இந்தியா நீரை நிறுத்தினால், பாகிஸ்தானில் மின்னுற்பத்தி தொடங்கி வேளாண்மை வரை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்தியா பேச்சு நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் அரசு கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்துவது குறித்து யோசிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்நிலையில் பெல்ஜியத்தின் பிரெஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் தூதுக் குழு தலைவா் பிலாவல் புட்டோ மேலும் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பேச்சுவாா்த்தை மூலம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வுகாண முடியும். இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தைக்கு வரமறுத்தால், நாங்களும் இந்தியாவுடன் இணக்கமாக செயல்பட முடியாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும்.
பாகிஸ்தானுக்கு வரும் நதிநீரை இந்தியா தடுத்தால், அது மோசமான செயலாகவே இருக்கும். இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்ள இந்தியாவுக்கு எதிராக போரிடுவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை.
சா்வதேச நாடுகள் இந்தியாவை பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தும் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் போரை விரும்புவதில்லை. அதே நேரத்தில் தேசப் பாதுகாப்பு, நதிநீதி உரிமை ஆகியவற்றில் வீட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்றாா்.
பிலாவல் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, அந்நாட்டில் ஆளும் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.