செய்திகள் :

இந்தியா மீதான 50% வரியால் அமெரிக்காவிற்கு என்னென்ன பாதிப்புகள்? - ட்ரம்பிற்கு எதிர்க்கட்சி கடிதம்

post image

கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கினாலும் இன்னமும் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒரு நல்ல முடிவை எட்டவில்லை.

தற்போது இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி அமலில் உள்ளது.

இதனால், இந்தியா - அமெரிக்கா உறவில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 21 அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் (Lawmakers) கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த 21 பேரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

"அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயலால் அமெரிக்காவின் விரோத நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இந்தியா தனது பொருளாதார மற்றும் ராஜாங்க உறவை அதிகப்படுத்தி உள்ளது.

இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித வரி இந்திய உற்பத்தியாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது.

இது இன்னொரு பக்கம், அமெரிக்கா வாடிக்கையாளர்களுக்கு விலையை உயர்த்துகிறது. மேலும், அமெரிக்க சந்தைக்குள் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அமெரிக்க நிறுவனங்களின் விநியோக சங்கிலியையும் பாதிக்கிறது.

இந்திய உறவு மிக முக்கியமானது

இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவு என்பது மிக மிக முக்கியமானது. இரு நாடுகளிலுமே இதை நம்பி ஆயிரக்கணக்கானோரின் வேலை இருக்கிறது.

செமிகண்டக்டர், மருத்துவம், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவின் மிக முக்கியமான மூலப்பொருள்களை நம்பி அமெரிக்க உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர்.

இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் உலகிலேயே மிக வேகமாக வளரும் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இருக்கின்றன.

அமெரிக்கா
அமெரிக்கா

பாதிக்கும் அமெரிக்க குடும்பங்கள்

அமெரிக்காவில் பில்லியன் டாலர்கள் கணக்கில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதன் மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

இப்போது விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் இந்த உறவைப் பாதிக்கின்றன. விலைவாசி உயர்வு மூலம் பல அமெரிக்க குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும், உலக அளவில் அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிடுவதையும் பாதிக்கிறது. இதனால், இந்தப் பிரச்னையை விரைவில் சரிசெய்ய வேண்டும்" என்று கடிதத்தில் எழுதியுள்ளனர்.

"பாஜக புதிய அடிமைகளையும் தேடி வருகிறது" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.9)செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது பேசிய அவர், "பாஜக அரசுக்கு ஏற்கனவே இபிஎஸ் என்ற அடிமை கிடைத்துவிட்டார்.மேல... மேலும் பார்க்க

கழுகார்: வெளிவந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்; கலக்கத்தில் தந்தை - மகன் டு கொதிக்கும் உடன்பிறப்புகள்!

கொதிக்கும் உடன்பிறப்புகள்!கட்டையைப் போடும் மாவட்ட நிர்வாகி...சமீபத்தில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடலோர மாவட்டம் ஒன்றுக்கு முதன்மையானவர் சென்றிருந்தபோது, அவரைச் சந்திக்க கட்சி நிர்வாகிகள் கூடிய... மேலும் பார்க்க

``மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' -நடிகர் சத்யராஜ்

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.9) திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் 'மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்ப... மேலும் பார்க்க

"தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?" - சீமான்

கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட ம... மேலும் பார்க்க

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை: விடுபட்ட அம்பேத்கர், எம்.சி.ராஜா பெயர்கள்; அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், ``இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது.ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்... மேலும் பார்க்க

மதுரை: நெருங்கும் தேர்தல் - சௌராஷ்ட்ர சமூகத்தினர் நடத்தவிருக்கும் அரசியல் எழுச்சி மாநாடு

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்கவும், தங்கள் சமூகத்தின் பலத்தை காட்டவும் சமீபகாலமாக பல்வேறு சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டஙகள... மேலும் பார்க்க