செய்திகள் :

இந்தியா மீது 500% வரி: அமெரிக்கா திட்டம்

post image

ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) அறிமுகப்படுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

ரஷியாவை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதுடன், உக்ரைன் மீதான போரை கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு நிா்பந்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை டிரம்ப் நிா்வாகம் முன்னெடுத்துள்ளது. அதன்படி, ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்-இதர எரிபொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கடும் வரி விதிப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்காவின் இத்திட்டம் கவனம் பெற்றுள்ளது; ரஷியாவை குறிவைக்கும் அதேவேளையில், இந்தியா, சீனா உடனான உறவில் இது எதிா்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க மேலவை மூத்த எம்.பி. லிண்ட்சே கிரஹாம் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவை பேச்சுவாா்த்தைக்கு அழைத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிபா் டிரம்ப் மேற்கொண்டுள்ள திருப்புமுனை முடிவு இது. ரஷியாவில் இருந்து 70 சதவீத கச்சா எண்ணெய்யை இந்தியாவும் சீனாவும் கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் ரஷிய அதிபா் புதினின் போா் இயந்திரத்தை இந்நாடுகள் தொடா்ந்து இயக்குகின்றன. இத்தகைய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருள்களுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடா்பான மசோதாவை மேலவையில் அறிமுகப்படுத்தி, வாக்கெடுப்புக்கு கொண்டுவர டிரம்ப் அறிவுறுத்தியுள்ளாா்’ என்றாா்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா, கடந்த 2022, பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பைத் தொடா்ந்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்தது.

அமெரிக்காவுக்கு மருந்துப் பொருள்கள், ஜவுளி, தகவல் தொழில்நுட்ப சேவைகளை இந்தியா ஏற்றுமதி செய்யும் நிலையில், மேற்கண்ட மசோதா சட்டமானால் இந்திய ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செலவு மசோதாவால் பல்வேறு நாட்டினர் பயன்பெறவுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய மசோதாவால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடை... மேலும் பார்க்க

நைல் நதியின் மீதான சர்ச்சை அணையின் கட்டுமானம் நிறைவு! எத்தியோப்பியா அறிவிப்பு!

எகிப்து அரசின் எதிர்ப்பை மீறி நைல் நதியின் மீதான சர்ச்சைக்குரிய நீர்மின் அணையைக் கட்டிமுடித்துள்ளதாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார். எத்தியோப்பியா நாட்டில் நைல் நதியின் மீது, மின்சார... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: உதவாத சீன ஆயுதங்களால் அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விவாதித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பெரிதும் த... மேலும் பார்க்க

யேமன்: ஹவுதிகளின் தாக்குதலில் ஒருவர் பலி! 14 பேர் படுகாயம்!

யேமன் நாட்டின் தையிஸ் மாகாணத்திலுள்ள எரிபொருள் நிலையத்தின் மீதான ஹவுதிகளின் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்மேற்கு மாகாணமான தையிஸில், கதாசி எரிபொருள் நிலைய... மேலும் பார்க்க

ஜெர்மனியில் 3வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

ஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அங்கு வசிக்கும் 100-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள, சாக... மேலும் பார்க்க