செய்திகள் :

இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

post image

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு பெருந்தலைவலியாக இருப்பார் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) பிற்பகல் களம் காணுகின்றன.

இந்திய அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றுவதே இந்திய அணியின் கோப்பை கனவுக்கான முக்கிய துருப்புச்சீடாக அமையுமென்று பார்க்கப்படுகிறது.

தினேஷ் கார்த்திக்

இந்த நிலையில், டிராவிஸ் ஹெட் குறித்து தினேஷ் கார்த்திக் அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது: “ரவி சாஸ்திரி கூறியிருப்பது போல, இத்தருணத்தில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியைவிடவும் ஒரேயொரு வீரர்தான் இந்திய அணி வீரர்களின் மன அழுத்தத்துக்கான முக்கிய காரணமாக இருப்பார். அவர் டிராவிஸ் ‘ஹெட்-ஏக்’.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிம்ம்சொப்பனமாக அவர் திகழ்கிறார். இந்த நிலையில், அவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள்.

ஒருவேளை அவரது விக்கெட்டை மிக விரைவிலேயே கைப்பற்றிவிட்டால், இந்திய வீரர்கள் ஆட்டத்தில் பிற விஷயங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நிம்மதி பெருமூச்சு விடுவதைப் பார்க்கலாம்” என்றார்.

நியூசி.க்கு எதிரான தொடரில் இவரே தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார்: பாக். கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆக்யூப் ஜாவத் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

336* கேட்சுகள்.. விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்து ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டா... மேலும் பார்க்க

முதல் அரையிறுதி: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முத... மேலும் பார்க்க

கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டைகளுடன் விளையாடினர்.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுத... மேலும் பார்க்க

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவானான பத்மகர் ஷிவல்கர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடாவிட்டாலும், உள்ளூர்ப் போட்டிகளில் கோலோச்சிய பத்மகர் ஷிவல்கர் கிரிக... மேலும் பார்க்க

நியூஸி. டி20 தொடர்: பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் நீக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் இருவரும்... மேலும் பார்க்க